பெண்ணை கொலை செய்துவிட்டு சடலத்தை உரப் பையிலிட்டு கடை ஒன்றில் வைத்துவிட்டுச் சென்ற நபர்

  • 20

எச்.எம்.எம்.பர்ஸான்

“காலையில் வங்­கிக்குச் சென்ற லைலா எனும் பெண்­மணி இன்னும் வீடு திரும்­ப­வில்லை. கண்­ட­வர்கள் எம்மை தொடர்பு கொள்­ளவும்” என்ற ஒரு செய்தி குறித்த பெண்ணின் புகைப்­ப­டத்­துடன் வியா­ழக்­கி­ழமை 5 ஆம் திகதி மாலை நேரம் முக­நூலில் அதிகம் பகி­ரப்­பட்­டது. ஆனால் அப் பெண்ணை பின்னர் உயி­ரு­ட­னன்றி சட­ல­மா­கவே கண்­டு­பி­டிக்க முடிந்­தமை துர­திஷ்­டமே.

அன்­றைய தினம் காலை 11 மணி­ய­ளவில் வீட்டில் இருந்து வங்­கிக்குச் சென்­றுள்ளார் வாழைச்­சேனை 5 ஆம் வட்­டா­ரத்தில் வசித்­து­வந்த முகம்­மது ஹனீபா சித்தி லைலா என்­பவர். மாலை­யா­கியும் அவர் வீடு திரும்­பா­ததால் கவ­லை­யுற்ற அவ­ரது குடும்­பத்­தினர் காணாமல் போன லைலாவை தேட ஆரம்­பிக்­கின்­றனர்.

அப்­போ­துதான், அவரை அவ­ரது உற­வுக்­காரர் ஒரு­வரே தனது ஆட்­டோவில் ஏற்றிச் சென்ற விடயம் குடும்­பத்­தா­ருக்கு தெரிய வரு­கி­றது.

உடனே லைலாவின் மகள், வாழைச்­சேனை பொலிஸ் நிலை­யத்­திற்குச் சென்று வங்­கிக்குச் சென்ற தனது தாய் இன்னும் வீடு திரும்­ப­வில்லை என்றும் தனது தாயை இன்­னார்தான் ஆட்­டோவில் ஏற்றிச் சென்­றுள்ளார். அவரை விசா­ரித்து எனது தாயை கண்­டு­பி­டித்துத் தாருங்கள் என்றும் முறை­யிட்­டுள்ளார்.

அந்தத் தக­வலின் படி குறித்த நபரை பொலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்த பொலிஸார் அப் பெண்ணை ஆட்­டோவில் ஏற்­றிச்­சென்­ற­தாக கூறப்­ப­டு­வது பற்றிக் கேட்­ட­றிந்­தனர்.

அதற்கு அவர், தான் ஏற்றிச் சென்­றது உண்மை என்றும் எனினும் ஓட்­ட­மா­வடி பகு­தியில் அந்தப் பெண்ணை இறக்கி விட்­ட­தா­கவும் அதன் பிறகு அவர் எங்கு போனார் என்­பது பற்றி தனக்குத் தெரி­யாது என்றும் கூறி­யுள்ளார். அது­மாத்­தி­ர­மன்றி அந்­நபர் “வாருங்கள். நான் ஆட்­டோ­வி­லி­ருந்து இறக்­கி­விட்ட பகு­தியில் தேடிப் பார்ப்போம்” என்று கூறி காணாமல் போன பெண்ணின் மக­ளையும் தனது மனை­வி­யையும் ஆட்­டோவில் ஏற்­றிக்­கொண்டு பிர­தேசம் முழு­வதும் தேடி அலைந்­துள்ளார்.

எங்கு தேடியும் லைலாவைக் கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை. மீண்டும் அவர்கள் பொலிஸ் நிலை­யத்­துக்கு சென்று முறை­யி­டு­கின்­றனர்.

எனினும் ஆட்­டோவில் ஏற்றிச் சென்ற நபர் மீதுதான் தனக்கு சந்­தேகம் உள்­ள­தா­கவும் அவரை முறை­யாக விசா­ரிக்­கு­மாறும் லைலாவின் மகள் மீண்டும் பொலி­சா­ரிடம் முறை­யிட்­டுள்ளார். எனினும் அவர் மீது பொலிஸார் சந்­தேகம் கொள்­ள­வில்லை.

அன்று இரவு ஒன்­பது மணி­யா­கியும் காணாமல் போன பெண்ணைப் பற்­றிய எந்த தக­வலும் கிடைக்­க­வில்லை.

இத்­த­னைக்கும் காணாமல் போன பெண்ணின் குடும்­பத்­தினர் மற்றும் பெண்ணை ஆட்­டோவில் ஏற்றிச் சென்ற நபர் ஆகியோர் பொலிஸ் நிலை­யத்­தி­லேயே அப்­போதும் இருக்­கி­றார்கள்.

இந்­நி­லை­யில்தான் அப் பெண்ணை ஆட்­டோவில் ஏற்றிச் சென்ற நபர் மீதே சந்­தேகம் நில­வு­வ­தாக பிர­தே­சத்தில் கதை தீயாய் பர­வி­யது.

இச் சம்­பவம் குறித்து அறிந்து கொண்ட, வாழைச்­சே­னையில் அமைந்­துள்ள வளர்ப்பு மீன் மற்றும் அலு­மி­னியப் பொருட்கள் விற்­பனை செய்யும் கடை உரி­மை­யாளர் ஒருவர் பொலிஸ் நிலையம் வந்து தகவல் ஒன்றை வழங்­கு­கிறார்.

“குறித்த பெண்ணை முச்­சக்­கர வண்­டியில் ஏற்றிச் சென்ற, தற்­ச­மயம் பொலிஸ் நிலை­யத்தில் இருக்கும் இந்­நபர் எனது கடைக்குள் இரண்டு உரப்­பை­களை வைத்து விட்டு சிறிது நேரத்தில் எடுக்க வரு­கிறேன் என்று சொல்­லி­விட்டுச் சென்றார்.

அப் பைகளை எடுத்துச் செல்­லு­மாறு இவ­ரது தொலை­பே­சிக்கு நான் பல­முறை அழைத்தும் அவர் பதி­ல­ளிக்­க­வில்லை. இவர் இன்னும் வந்து எடுக்க வர­வில்லை. அதில் எனக்கு சந்­தே­க­மாக உள்­ளது” என்று கூறி­யுள்ளார்.

உட­ன­டி­யாக செயற்­பட்ட பொலிஸார் குறித்த இடத்­திற்குச் சென்று பரி­சோ­தித்­ததில் உரப்­பையில் இருப்­பது காணாமல் போன லைலா என்­ப­வரின் சடலம் என்­பதை அடை­யாளம் கண்­டனர்.

பின்­னர்தான் முச்­சக்­கர வண்­டியில் ஏற்றிச் சென்ற குறித்த நபர், ஓட்­ட­மா­வடி எம்.பி.சீ.எஸ். வீதி­யி­லுள்ள தனது கடைக்குள் அப் பெண்ணை அழைத்துச் சென்று கழுத்தை நெரித்துக் கொலை செய்­துள்­ள­மையும் அதன் பின்னர் தனக்கு எதுவும் தெரி­யாது என நாட­க­மா­டி­யுள்­ள­மையும் தெரி­ய­வந்­தது.

குறித்த நபர் அந்தக் கொலையை மறைப்­ப­தற்கு கொலை செய்­யப்­பட்ட பெண்ணின் சட­லத்தை உரப்பை ஒன்றில் போட்டு அத­னுடன் சந்­தேகம் வராத வகையில் மற்­றொரு உரப்­பையில் வேறு பொருட்­களை வைத்து இரண்டு உரப்­பை­க­ளையும் அவ­ரது முச்­சக்­கர வண்­டியில் ஏற்றிச் சென்று சுமார் மூன்று கிலோ­மீட்டர் தூரத்­தி­லுள்ள அவ­ரது உற­வினர் ஒரு­வரின் வளர்ப்பு மீன் மற்றும் அலு­மி­னியப் பொருட்கள் விற்­பனை செய்யும் கடையில் வைத்­துள்ளார். அத்­துடன் இந்த இரண்டு பைகளும் இருக்­கட்டும் இதனை நான் சிறிது நேரத்தில் வந்து எடுத்துக் கொள்­கிறேன் என்று கூறி உரப்­பை­களை வைத்து விட்டுச் சென்­றுள்ளார்.

அன்­றை­ய­தினம் முழுக்க அப் பெண்ணின் உடல் உரப்­பைக்குள் வைக்­கப்­பட்ட நிலையில் குறித்த கடைக்­குள்தான் இருந்­தி­ருக்­கி­றது.

மறுநாள் வெள்ளிக்­கி­ழமை 6 ஆம் திகதி அதனை வாழைச்­சேனை மாவட்ட நீதவான் நீதி­மன்ற நீதி­பதி எச்.எம்.எம்.பசீல் பார்­வை­யிட்டு சட­லத்தை பிரேத பரி­சோ­த­னைக்­காக மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்துச் செல்­லு­மாறு கட்­டளை பிறப்­பித்தார்.

இக் கொலையை புரிந்­த­தாக நம்­பப்­படும் 26 வய­து­டைய ஒரு பிள்­ளையின் தந்­தையையும் சடலம் இருந்த உரப்பை வைக்­கப்­பட்ட கடை உரி­மை­யா­ள­ரையும் பொலிஸார் கைது செய்து விளக்­க­ம­றி­யலில் வைத்­துள்­ளனர்.

கொலை செய்த பெண்ணை உரப்­பையில் போட்டு கடை ஒன்றில் வைத்து விட்டுச் சென்ற நபர் அதை இரவு வேளையில் எடுத்துச் சென்று யாரும் காணாத இடத்தில் புதைத்­து­விட்டு, சம்­ப­வத்தை மறைக்க முயற்சி செய்­துள்ளார் என பொலி­ஸாரின் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

இவ்­வாறு கொடூ­ர­மான முறையில் கொலை செய்­யப்­பட பெண் இள­மை­யி­லி­ருந்தே வறு­மைக்­கோட்டின் கீழ் வாழ்ந்து பல்­வேறு இன்­னல்­களை அனு­ப­வித்­தவர் என அப் பகுதி மக்கள் கவ­லை­யுடன் தெரி­விக்­கின்­றனர்.

கொலை செய்­யப்­பட்ட பெண் அய­ல­வர்­க­ளுக்கு உதவி செய்­வதில் முன்­னிற்­பவர் என்றும் அண்டை வீட்டார் அவரை பெரு­மை­யோடு நினைவு கூரு­கி­றார்கள்.

மேலும் நான்கு பிள்­ளை­களின் தாயான 55 வய­து­டைய லைலா, புற்­று­நோயால் பாதிக்­கப்­பட்டு நீண்­ட­காலம் மக­ர­கம வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வந்­துள்­ள­தா­கவும் அவ­ரது குடும்­பத்­தினர் கூறு­கின்­றனர்.

லைலாவை கொலை செய்த நபரும், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் லைலாவின் உறவினர்தான் என்றும் அவர்களுக்குள் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் முரண்பாடுதான் கொலை வரை சென்றுள்ளதாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

இவ்­வாறு கொலை செய்­யப்­பட்ட பெண்ணின் சடலம் மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையில் பிரேத பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்டு உற­வி­னர்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­டது. அவ­ரது ஜனாஸா வாழைச்­சே­னையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.-Vidivelli

எச்.எம்.எம்.பர்ஸான் “காலையில் வங்­கிக்குச் சென்ற லைலா எனும் பெண்­மணி இன்னும் வீடு திரும்­ப­வில்லை. கண்­ட­வர்கள் எம்மை தொடர்பு கொள்­ளவும்” என்ற ஒரு செய்தி குறித்த பெண்ணின் புகைப்­ப­டத்­துடன் வியா­ழக்­கி­ழமை 5 ஆம் திகதி மாலை…

எச்.எம்.எம்.பர்ஸான் “காலையில் வங்­கிக்குச் சென்ற லைலா எனும் பெண்­மணி இன்னும் வீடு திரும்­ப­வில்லை. கண்­ட­வர்கள் எம்மை தொடர்பு கொள்­ளவும்” என்ற ஒரு செய்தி குறித்த பெண்ணின் புகைப்­ப­டத்­துடன் வியா­ழக்­கி­ழமை 5 ஆம் திகதி மாலை…