உயர்தர மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பத் திகதி செப்டம்பர் 15 வரை நீடிப்பு

  • 14

லோரன்ஸ் செல்வநாயகம்

கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கு ஒன்லைன் மூலமாக விண்ணப்பிப்பதற்கான காலம் எதிர்வரும் செப்டெம்பர் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பாடசாலைகள் மற்றும் தனியார் பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் கடந்த ஜூலை 5ஆம் திகதியிலிருந்து ஜுலை 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது எனினும் நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அதற்கான திகதி மீண்டும் எதிர்வரும் 15ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. அதற்கிணங்க விண்ணப்பங்களை ஒன்லைன் மூலமாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு www.doenets.lk

அல்லது கையடக்க தொலைபேசியை உபயோகித்து (mobile app)”DoE” மூலம் வழங்கப்பட்ட ஆலோசனைகளை மிகச்சரியாக வாசித்து அதற்கிணங்க ஒன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

லோரன்ஸ் செல்வநாயகம் கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கு ஒன்லைன் மூலமாக விண்ணப்பிப்பதற்கான காலம் எதிர்வரும் செப்டெம்பர் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.…

லோரன்ஸ் செல்வநாயகம் கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கு ஒன்லைன் மூலமாக விண்ணப்பிப்பதற்கான காலம் எதிர்வரும் செப்டெம்பர் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.…