காதல் கொண்டேன்
- by admin
- 19
காதல் கொண்டேன்
உன்னில் முதன்முறையாக
காதல் கொண்டேன்
முகமுழுவதும் கழுவி
முந்தானை கட்டி
முத்தமிடும் நோக்கில்
உனைப் பார்க்க வந்தேன்…
வலிகள் நிறைந்த என்னிதயம்
உனைப் பார்க்கையில்
வனச்சோலையாய் ஆனதடா!
நெஞ்சம் கனத்தாலும்
உனை பார்க்கும் கணங்கள்
நிம்மதியாய் இருந்ததடா!
தேவையில்லை
மருந்தெதுவும் தேவையில்லை
உனைசந்திக்கும் பொழுதுகளில்
இதயத்தில் பாரமில்லை
எனைக்கெஞ்ச வைத்துப் பார்ப்பதில்
உனக்கு ஆசைதான்
உனைக்கெஞ்சி கெஞ்சி கேட்பதில்
எனக்கும் பேராசைதான்
கேட்பதையெல்லாம் தராமல்
கெட்டதையெல்லாம் நீக்கிவிட்டு
நல்லதையே தருகிறாய்.
கஸ்டப்படும் வேலையிலும்
மற்றவெல்லா பொழுதுகளிலும்
அன்பாய் நீ இருக்கின்றாய்.
அலங்கார உலகத்தில்
ஆசைகளின் உறைவிடத்தில்
அடைக்கலம் புகுந்த என் ஆன்மா
அன்பே உன்னிடம்
கேட்பதெல்லாம் ஒன்று தான்!
காலமெல்லாம் உன் காதல்
குறையாமல் கிடைக்க வேண்டும்
சலிக்காமல் நானும்தான்
சஜ்தாக்கள் செய்ய வேண்டும்
உன்நினைவை மட்டும் தான்
என் இதயம் சுமக்க வேண்டும்
உள்ளத்தின் அழுக்குகள்
உன்நினைவால் கரைய வேண்டும்
என் ஆசை கேட்பாயா?
உன் காதல் தொடர்வாயா0?
உன் மேல் நான் கொண்ட
காதலுக்கு பரிசாக
சுகங்களெல்லாம் சூழ்ந்திருக்கும்
சுவனத்தை தருவாயா..?
ஆம்
காதல் கொண்டேன் உன்னில்
இறைவா!
காதல் கொண்டேன்
இதோ! என்காதலை சொல்கிறேன்
ஏற்றுக் கொள்
லாஹிலாஹ இல்லல்லாஹு முஹம்மதர் ரஸூலுல்லாஹ்
Rushdha Salam
SEUSL
காதல் கொண்டேன்உன்னில் முதன்முறையாககாதல் கொண்டேன்முகமுழுவதும் கழுவிமுந்தானை கட்டிமுத்தமிடும் நோக்கில்உனைப் பார்க்க வந்தேன்… வலிகள் நிறைந்த என்னிதயம்உனைப் பார்க்கையில்வனச்சோலையாய் ஆனதடா!நெஞ்சம் கனத்தாலும்உனை பார்க்கும் கணங்கள்நிம்மதியாய் இருந்ததடா! தேவையில்லைமருந்தெதுவும் தேவையில்லைஉனைசந்திக்கும் பொழுதுகளில்இதயத்தில் பாரமில்லைஎனைக்கெஞ்ச வைத்துப் பார்ப்பதில்உனக்கு ஆசைதான்உனைக்கெஞ்சி…
காதல் கொண்டேன்உன்னில் முதன்முறையாககாதல் கொண்டேன்முகமுழுவதும் கழுவிமுந்தானை கட்டிமுத்தமிடும் நோக்கில்உனைப் பார்க்க வந்தேன்… வலிகள் நிறைந்த என்னிதயம்உனைப் பார்க்கையில்வனச்சோலையாய் ஆனதடா!நெஞ்சம் கனத்தாலும்உனை பார்க்கும் கணங்கள்நிம்மதியாய் இருந்ததடா! தேவையில்லைமருந்தெதுவும் தேவையில்லைஉனைசந்திக்கும் பொழுதுகளில்இதயத்தில் பாரமில்லைஎனைக்கெஞ்ச வைத்துப் பார்ப்பதில்உனக்கு ஆசைதான்உனைக்கெஞ்சி…