Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
அசைபோடுதல் 

அசைபோடுதல்

  • 46

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

வரம்பு கட்டி விதை விதைச்சி
மாடு கொண்டு சூடடிச்சி
அறுவடைக்காகக் காத்து நின்னு
அள்ளி விதைச்ச அழகு நெல்லு
சுளகு கொண்டு புடைச்செடுத்து
சுற்றமெல்லாம் சேர்ந்திருந்து
ஆக்கித்தின்ற காலமெல்லாம்
காலமுள்ளில் காணாமலே போயிடுச்சி

வைரமணி ஓசையில்
வண்டி நெறுநெறுங்க
குடும்பமெல்லாம் ஒன்றுசேர்ந்து
கூட்டாஞ்சோறு கூடித்தின்ன
குளத்தோர குச்சிவீட்டுக்கு
குதூகலமாய் சென்று வந்தோம்

அன்புக்கும் பஞ்சமில்லை
ஆக்கினைகள் அதிகமில்லை
ஆடவர்கள் பெண்டிரென
ஆயிரம் பேர் கூடிநின்னு
ஆறு ஊருத் திருவிழாவை
ஆடிப்பாடி கொண்டாடினோம்

முற்றத்துப் பெருவெளியில
முழுநிலவின் பேரொளியில
ஒய்யாரமாய் உட்காந்து
ஓயாத பாட்டி பேச்சை
மணிக்கணக்கா கேட்டிருந்து
மடியுறக்கம் கொண்டிருந்தோம்

அடுப்பு மெழுகி
அத்தி விறகொடிச்சி
மச்சான் வரும் வரைக்கும்
வாளைமீனை வறுத்துவச்சி
வாழையிலை போட்டுவச்சி
வாசற்படியிலே வாஞ்சனையுடன்
வாடிநின்னே வாழ்ந்திருந்தோம்

பால்சொறியும் பசுவினிலே
தித்திக்கும் பால் கறந்து காச்செடுத்த பால் மணமும்
சுட்டுவச்ச கருவாட்டின்
சுண்டியிழுக்கும் வாசனையும்
வெட்டவெளியில போட்ட குட்டித்தூக்கமும்
கண்ணுக்குள் கலையாத
கனவாகக் கலந்திருக்கு

வாய்க்காலின் துறைகளிலே
மொய்த்திட்ட மீனையெல்லாம்
சேலையின் முந்தானையால்
நீரோட வாருனதும்
கிண்ணியில அரச்சுவச்ச
சந்தனத்த தேச்சு
ஓடையில் நீராடுனதும் நெஞ்சுக்குள்ள வந்து நிக்கும்
நினைவுகளா நிலைச்சிருக்கு

ஏரிக்கரை ஓரத்துல – வகிடெடுத்த வதனத்தோடு
குமரிப் பெண்களெல்லாம்
குடங்குடமாய் நீரெடுத்து
இடையசைச்சி நடையசைச்சி
ஒத்தையடிப் பாதையில
பவனி வந்த காட்சியெல்லாம்
காலத்தின் துளிகளிலே கரைஞ்சே போயிடுச்சி

சென்றொழிந்த காலங்களும்
மீண்டு வரப்போவதில்லை
நினைவுகளின் ஆக்கிரமிப்பில் விக்கித்த ஞாபகங்களாய்
அசைபோடும் பழமைகளில்
அலாதியான சுகமொன்று
அப்பிக் கொள்ளத்தான் செய்கிறது

நிலாக்கவி நதீரா முபீன்
புளிச்சாக்குளம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

வரம்பு கட்டி விதை விதைச்சி மாடு கொண்டு சூடடிச்சி அறுவடைக்காகக் காத்து நின்னு அள்ளி விதைச்ச அழகு நெல்லு சுளகு கொண்டு புடைச்செடுத்து சுற்றமெல்லாம் சேர்ந்திருந்து ஆக்கித்தின்ற காலமெல்லாம் காலமுள்ளில் காணாமலே போயிடுச்சி வைரமணி…

வரம்பு கட்டி விதை விதைச்சி மாடு கொண்டு சூடடிச்சி அறுவடைக்காகக் காத்து நின்னு அள்ளி விதைச்ச அழகு நெல்லு சுளகு கொண்டு புடைச்செடுத்து சுற்றமெல்லாம் சேர்ந்திருந்து ஆக்கித்தின்ற காலமெல்லாம் காலமுள்ளில் காணாமலே போயிடுச்சி வைரமணி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *