Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
இருளின் எச்சங்கள் 

இருளின் எச்சங்கள்

  • 21

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

மருச்சியுற்ற இரவுகளில்
வெருட்சியுற்ற விழிகள்
நெஞ்சதிரும் வெடிப்பொலியில்
துஞ்சிமடிந்த உயிர்கள்

குண்டுகளால் முண்டங்கள் சரிய
நொடிக்குள்ளே நூற்றுக்கணக்கான உடல்களும் குதறப்பட்டு
கடுகளவாய் சிதறிக்கிடக்க

வதையிலும் வலியிலும்
சிதைந்த சதைகள்
வெந்து அவிந்து
பொசுங்கியே போனது

தீப்பசிக்கு உணவான
உடலின் அவயங்களும்
நாறும் பிணங்களை
வாரும் முள்ளிடுக்கிகளும்

பாலினைச் சுரக்காத
பிணத்தின் முலைகளை
மலப்பீழை கண்ணில் வழிய
பற்றியழும் பிஞ்சிகளும்

நினைவுகளின் ஆக்கிரமிப்பில்
துன்பங்கள் துருப்பிடித்தாலும்
ஆன்மாக்களின் சாந்தி வேண்டி அனைவருமாய் பிரார்த்திப்போம்.

நிலாக்கவி நதீரா,
புளிச்சாக்குளம்,
யாழ்ப்பாணப் பல்கலை கழகம்.

மருச்சியுற்ற இரவுகளில் வெருட்சியுற்ற விழிகள் நெஞ்சதிரும் வெடிப்பொலியில் துஞ்சிமடிந்த உயிர்கள் குண்டுகளால் முண்டங்கள் சரிய நொடிக்குள்ளே நூற்றுக்கணக்கான உடல்களும் குதறப்பட்டு கடுகளவாய் சிதறிக்கிடக்க வதையிலும் வலியிலும் சிதைந்த சதைகள் வெந்து அவிந்து பொசுங்கியே போனது…

மருச்சியுற்ற இரவுகளில் வெருட்சியுற்ற விழிகள் நெஞ்சதிரும் வெடிப்பொலியில் துஞ்சிமடிந்த உயிர்கள் குண்டுகளால் முண்டங்கள் சரிய நொடிக்குள்ளே நூற்றுக்கணக்கான உடல்களும் குதறப்பட்டு கடுகளவாய் சிதறிக்கிடக்க வதையிலும் வலியிலும் சிதைந்த சதைகள் வெந்து அவிந்து பொசுங்கியே போனது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *