அநாதையின் மடல்
- by admin
- 10
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
ஊரெங்கும் உறங்கிக்கிடக்கிறது-என்
உடலிருக்கும்
உயிர் மட்டும் ஊசலாடுகிறது
உறங்க வைக்க
உன் மடி இல்லையென்று…
மோகம் விட்ட மழை போல்
உன் கருவிலிருந்து
உதிர்ந்த நான்
கடலினுள்ளா விழுந்தேன்-மாறாக
கண்ணீரில் கலந்தேன்…
துடைத்திட வந்திடுமோ
உன் கரங்கள்
உடைந்து போய் காத்திருக்கிறது-என்
உள்ளம்…
தண்ணீரும் தாமரையுமாய் வாழ்ந்திட
ஆசை
உன்னோடு-நீயோ
தாமரை இலைமேல் நீராக
தடவிச் செல்கிறாய்
அரவணைத்துச் செல்லாமல்…
தாயே
தனியாக தவிக்கிறேன்
தாலாட்டு பாடிட வா
பாடையேறு முன்னே
பாசம் காட்டிட வா….
உனக்கென நான்
எழுதிடும் மடல்
என் உடலோடு மக்கிப்போகும்
முன்னே
முன்பே வந்திடு
அன்பை தந்திடு
அநாதை என்று இல்லாமல்
அனைந்து போகிறேன்
பூமி எனும் விளக்கிலிருந்து…
பாத்திமா அப்றின்,
அட்டாளைச்சேனை-09
ஊரெங்கும் உறங்கிக்கிடக்கிறது-என் உடலிருக்கும் உயிர் மட்டும் ஊசலாடுகிறது உறங்க வைக்க உன் மடி இல்லையென்று… மோகம் விட்ட மழை போல் உன் கருவிலிருந்து உதிர்ந்த நான் கடலினுள்ளா விழுந்தேன்-மாறாக கண்ணீரில் கலந்தேன்… துடைத்திட வந்திடுமோ…
ஊரெங்கும் உறங்கிக்கிடக்கிறது-என் உடலிருக்கும் உயிர் மட்டும் ஊசலாடுகிறது உறங்க வைக்க உன் மடி இல்லையென்று… மோகம் விட்ட மழை போல் உன் கருவிலிருந்து உதிர்ந்த நான் கடலினுள்ளா விழுந்தேன்-மாறாக கண்ணீரில் கலந்தேன்… துடைத்திட வந்திடுமோ…