அந்த இரவு
- by admin
- 31
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
ஸூறாத்துல் கத்ரின் கருத்துக்கள் கவி அமைப்பில்
இரவுகள் ஆயிரம்
இனிய கதைகள் பேசும்
இவ்வாண்டின்
இன்பம் தரு
அந்த இரவின் கதை இது
வெட்கித் தலை குனியாது
வெடுக்கென முகம் சுழியாது
வெற்றிக்காய் என்றெண்ணி
வெறுமனே கொஞ்சம் கேளீர்
அழகிய இராப்பொழுது
அவனின் பேச்சின் மகிமை
அவனின் அன்புக் கட்டளைகள்
அவனின் எதிர்பார்ப்புக்கள்
அத்தனையும் சுமந்த
அல்குர்ஆன் இறங்கிய
அற்புத இரவே அது
லைலதுல் கத்ர்
ஆடிக் கழிவு போல்
ஓடி வந்து
கோடி நன்மைகள் பெருக்கித்தரும்
ஆயிரம் மாதங்களையும் விட
அதுவே சிறந்த இரவு
லைலதுல் கத்ர்
வானவர் கூட்டம் பூமிதனில்
வாகாய் இறங்கி
வசதியாய்
வலம் வரும்
வண்ணமான இரவு
லைலதுல் கத்ர்
மன்றாடி
மனந்திரும்பும்
மாந்தர் மனம்
மகிழ்ந்து பூரிக்க
சாந்திகள் சொரிந்திடும்
சாந்தமான இரவு
லைலதுல் கத்ர்
களைப்பின் விழிம்பில்
கடின பாதங்களும்
கரைந்து தோய்ந்து
கனதி பாராது
நின்று வணங்கினால்
நிம்மதியுறும் செய்தியொன்றை
நித்தமே தாங்கிய இரவு
“முன் செய்த பாவக்கறைகள்
முழுவதுமாய் கழுவப்படுமாம்”
லைலதுல் கத்ர்
இரட்டை ஐந்துகளாம்
இறுதிப் பத்தின்
ஒற்றை இரவுகளில்
ஓர் நாள் வந்திடுமே
இனிமை கொண்டு
பக்குவம் பூண்டு
பறக்கத் சொரியும்
இவ்வாண்டின்
முதலிரவு!
அதுவே லைலதுல் கத்ர் இரவு!
ஷீபா இப்றாஹீம் (ஹுதாஇய்யாஹ்)
B.A (Hons) Ⓡ _ SEUSL
Psychological Counsellor Ⓡ
Maruthamunai.
ஸூறாத்துல் கத்ரின் கருத்துக்கள் கவி அமைப்பில் இரவுகள் ஆயிரம் இனிய கதைகள் பேசும் இவ்வாண்டின் இன்பம் தரு அந்த இரவின் கதை இது வெட்கித் தலை குனியாது வெடுக்கென முகம் சுழியாது வெற்றிக்காய் என்றெண்ணி…
ஸூறாத்துல் கத்ரின் கருத்துக்கள் கவி அமைப்பில் இரவுகள் ஆயிரம் இனிய கதைகள் பேசும் இவ்வாண்டின் இன்பம் தரு அந்த இரவின் கதை இது வெட்கித் தலை குனியாது வெடுக்கென முகம் சுழியாது வெற்றிக்காய் என்றெண்ணி…