அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 19
- by admin
- 7
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
சாப்பிட்டு முடிந்த பிறகு சோஃபி அலைசை தனியாக அழைத்தால்,
“உங்களுக்கு ஒரு விஷயம் தெரியாது. சொல்றேன்னு தப்பா எடுத்துக்கொள்ள வேணாம். ஆனா இந்த விஷயத்தை இப்படியே விட்டா தப்பு தப்பா நடந்துடும்.”என்றாள்.
“என்ன புதிர் போடுறே… அப்படி என்ன விஷயம்.” என்று அலைஸ் கேட்டாள்.
“உங்க அக்கா இன்னிக்கி என்ன பண்ணாங்க தெரியுமா? அவங்க குளிக்க போகும் போது ரியூகியை துணைக்கு வரும்படி கேட்டுகிட்டாங்க..”
“என்ன?”
“ஆமா… அண்ணன் எவ்வளவு சொல்லியும் இழுத்துட்டு போனாங்க.”
“அப்பறம் என்னாச்சி…”
“எங்க அண்ணன் என்னா சும்மாவா மறு செக்கனே வெளிய வந்துட்டான்.”
“ஓஹ்.. ஆஹ் அதுசரி கியோன் எங்க? ஆளையே காணும்”
“அவரா… அவருக்கு காயம் பட்டிருக்கும் இடத்தில் மருந்து போட்டு விட்டேன். ரூம்ல இருக்காரு.” என்றாள் சோஃபி.
“என்ன புதுசா அவர் இவர் என்றெல்லாம் சொல்லுறே” என்று அலைஸ் கேட்டதும்,
“அப்படியா சொன்னேன்.. இருக்காதே.. சரி அவனுக்கு கட்டு போட்டிருக்கேன்.. ஓகேயா?” என்று சொல்லி சிரிக்க
“இப்போ ஓகே..” என்றால் அவளும் சிரித்து கொண்டே.
*********************************************
நிழல் தேவதைகள் உலகில்,
“சொல்லு போபி.. எனக்கு என்ன செய்தி கொண்டு வந்திருக்கே” என்று கேட்டான் சோஜோ – அந்த உலகின் தலைவன்.
“நம்ம ஆளு மாயா கொடுத்த வேலையை கச்சிதமா பண்ணிக்கிட்டு இருக்கா.”
“அவங்க அவளை நம்பிட்டங்களா?”
“அப்படித்தான் மாஸ்டர் தோணுது.”
“சரி நீ போகலாம்.”
கோரின் வீட்டில்,
கோரின் அவளுடைய அறையில் யாருடனோ பேசுவது கேட்டு அலைஸ் அப்படியே நின்றாள். ஒருவேளை ரியூகியும் அக்காவும் ஏதும் பேசுகிறார்களா என்றெண்ணி கதவோரமாக சென்று எட்டிப்பார்த்தாள். கண்ணாடியில் சோஜோ தெரிந்தான். அலைஸ் பயத்துடன் நடப்பதை பார்த்தாள்.
“மாயா, சொன்னதை எல்லாம் சரியா செய்திட்டாயா?” என்று அவன் கேட்டதும்,
அலைஸ் மனதில் “என்னது மாயாவா!” என்றொரு கேள்வி எழுந்தது.
“இன்னும் கொஞ்ச நேரத்தில் அவளை நம்ம உலகத்துக்கு கொண்டு வந்துடுவேன்.” என்று அந்த மாயா சொன்னதும் அலைசுக்கு புரிந்து விட்டது.
“இவ நம்ம அக்கா கோரின் கிடையாது. இன்னும் கொஞ்ச நேரத்தில் இவ என்னை எதிரிகள் கிட்ட ஒப்படைக்க முதல் விஷயத்தை ரியூகி கிட்ட சொல்லிடனும்.”என்றெண்ணி பதற்றத்தில் திரும்பி செல்ல முற்பட்டவளுக்கு முன்னாடி வந்து நின்றாள் மாயா.
தொடரும்……
ALF. Sanfara.
சாப்பிட்டு முடிந்த பிறகு சோஃபி அலைசை தனியாக அழைத்தால், “உங்களுக்கு ஒரு விஷயம் தெரியாது. சொல்றேன்னு தப்பா எடுத்துக்கொள்ள வேணாம். ஆனா இந்த விஷயத்தை இப்படியே விட்டா தப்பு தப்பா நடந்துடும்.”என்றாள். “என்ன புதிர்…
சாப்பிட்டு முடிந்த பிறகு சோஃபி அலைசை தனியாக அழைத்தால், “உங்களுக்கு ஒரு விஷயம் தெரியாது. சொல்றேன்னு தப்பா எடுத்துக்கொள்ள வேணாம். ஆனா இந்த விஷயத்தை இப்படியே விட்டா தப்பு தப்பா நடந்துடும்.”என்றாள். “என்ன புதிர்…