ஆசானை ஆனந்தமாய் வாழ்த்துகின்றோம்
- by admin
- 28
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
ஆண்டொன்றில் எத்தனையோ தினமுண்டு.
ஆசிரியர்களுக்காய் பூத்தது நாளின்று.
ஆசிரியர் என்ற சொல்லில்
ஆச்சரியம் காணுகின்றோம்
ஆசாரம் பலவும் சொல்லி
ஆகமமும் கற்றுத் தந்தீர்.
ஆக்கியோன் நீங்களானீர் நன்மக்களை
ஆசி சொல்ல நான் வந்தேன் பூப்பாக்களை
ஆண்டு தோறும் வந்து போகும் இந்நாள் தான்
ஆயுள் உள்ளவரை மறவோமே உங்ளை நாம்.
ஆரவாரம் எதுவுமின்றி மெதுவாகத்தான்
ஆசிரியப்பணி செய்கின்றீர் அழகாகத்தான்
ஆரம் ஒன்று கட்ட வேண்டடும் பூத்தொடுத்து
ஆரோக்கியம் நிறை வாழ்வு பிரார்த்தித்து.
ஆர்மை மிக்க உங்கள் புகழ் ஓங்க வேண்டும்
ஆலமரமாய் நீங்கள் நிமிர்ந்து வாழ வேண்டும்
ஆதரவு காட்டி நீங்கள் அரவணைத்தீர்
ஆயியாய் உருமாறி கற்றுத்தந்தீர்
ஆதாரம் நீர் ஆனீர் நாம் வளர
ஆனந்தமாய் வாழ்த்துகின்றோம் மனம் குளிர.
ஆகாயம் தொட வேண்டும் என்று சொன்னீர்.
ஆதனம் நற்கல்விதான் சொல்லித் தந்தீர்.
ஆயிரம் தான் கவி சொல்வோம் உங்களுக்கு நாம்
ஆழிவித்தாய் போற்றுவோமே உங்களை நாம்.
Farhana Abdullah
maggona.
ஆண்டொன்றில் எத்தனையோ தினமுண்டு. ஆசிரியர்களுக்காய் பூத்தது நாளின்று. ஆசிரியர் என்ற சொல்லில் ஆச்சரியம் காணுகின்றோம் ஆசாரம் பலவும் சொல்லி ஆகமமும் கற்றுத் தந்தீர். ஆக்கியோன் நீங்களானீர் நன்மக்களை ஆசி சொல்ல நான் வந்தேன் பூப்பாக்களை…
ஆண்டொன்றில் எத்தனையோ தினமுண்டு. ஆசிரியர்களுக்காய் பூத்தது நாளின்று. ஆசிரியர் என்ற சொல்லில் ஆச்சரியம் காணுகின்றோம் ஆசாரம் பலவும் சொல்லி ஆகமமும் கற்றுத் தந்தீர். ஆக்கியோன் நீங்களானீர் நன்மக்களை ஆசி சொல்ல நான் வந்தேன் பூப்பாக்களை…