திடசங்கற்பம் பூணுவோம் ஆசான்களே!
- by admin
- 7
ஆசிரியர் தினம் என்பது ஆசிரியர்களை வாழ்த்த மட்டுமல்ல. ஆசான்கள் தமது பலம் பலவீனங்களை அறிந்து செப்பனிட்டு தம்மை மீள் கட்டமைக்கும் நாளும் ஆகும்.
ஒரு மாணவனின் வாழ்நாள் நீடித்த உடல் உள ஆரோக்கியத்திற்கு ஒரே ஒரு ஆசானின் ஒரே ஒரு வார்த்தை போதும்.
ஆசான்களே! நீர் செய்வது தொழில் அல்ல சேவை தியாகம் அர்ப்பணிப்பு தாய்மையுடன் கூடிய அரவணைப்பு.
ஆசான்களின் கதாபாத்திரங்கள் பரிணமிக்க வேண்டும். தாயாய், தோழியாய், சகோதரியாய் ஒவ்வொரு மாணவனும் நினைக்கட்டும் எனது ஆசான் என் உயிர் தோழி என்று.
மாணவன் உச்சத்தைத் தொடும் பொழுது சந்தோஷத்தில் ஆசிரியரின் கண்கள் சிந்த வேண்டும் கண்ணீர் அதுவே மாணவனுக்கான பிரார்த்தனைகள் ஆக.
திடசங்கற்பம் பூணுவோம் ஆசான்களே! மாணவர்களின் இதயத்தில் வாழ்வோம். அவர்களின் ஆளுமைகளை வளர்ப்போம். உடல் உள நலத்தை வார்த்தைகளால் பாதுகாப்போம்.
Gazzaliyan.
கஸ்ஸாலிகவி
Fathimafousuleid
ஆசிரியர் தினம் என்பது ஆசிரியர்களை வாழ்த்த மட்டுமல்ல. ஆசான்கள் தமது பலம் பலவீனங்களை அறிந்து செப்பனிட்டு தம்மை மீள் கட்டமைக்கும் நாளும் ஆகும். ஒரு மாணவனின் வாழ்நாள் நீடித்த உடல் உள ஆரோக்கியத்திற்கு ஒரே…
ஆசிரியர் தினம் என்பது ஆசிரியர்களை வாழ்த்த மட்டுமல்ல. ஆசான்கள் தமது பலம் பலவீனங்களை அறிந்து செப்பனிட்டு தம்மை மீள் கட்டமைக்கும் நாளும் ஆகும். ஒரு மாணவனின் வாழ்நாள் நீடித்த உடல் உள ஆரோக்கியத்திற்கு ஒரே…