இப்படிக்கு ரமழான்
- by admin
- 19
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
உனக்காய் வந்தேன் உன் வாசல்
மிகுந்து வரவேற்றாய்
பூரித்து போனேன்
நாட்கள் நகருகின்றது
உன்னை விட்டும்
நான் விடை பெற
நான் நகரும் நாட்கள்
உன் பாவ அழிவுக்கே
மனமுவந்து என்னை
கடைசி வரை ஏற்றுக்கொள்
என் தவணை முடிய
மூன்றாக என்னை பங்கிட்டு
முதல் பத்தாய்
உன்னை விட்டுப் போகிறேன்
ஆனால் நீயோ
முதல் நாளன்று
என்னை வரவேற்றது
போல் இல்லை
இப்போது உன் வரவேற்பு
மங்கியது ஏனோ
பழகப் பழகப்
பாலும் புளிக்கும்
நானும் புளித்து விட்டேனோ
மறந்து விட்டாய் போலும்
என் ஒவ்வொரு உதயமும்
நான் உனக்காய்
கொண்டு வரும் அருள்களை
அல்லாஹ்வின் அருளோடு ரமழானில்
நான் பிறந்தேன்
பாவ சுமை மக்கள் தலை தாக்க
அதை இறக்கி வைக்க வந்த
நானே இன்று கால ஓட்டமாய்
ஓடிக் கொள்கின்றேன்
உன்னையும் இழுத்துக் கொண்டு
ஆனால் நியோ
என் ரஹ்மத் அறியாமல்
என்னை தட்டிக் கழிக்கின்றாய்
மனிதா! நன்றி மறவாதே
அடுத்த முறையும் நான் இருப்பேன்
இதே போல் வருகை கொள்வேன்
சபதம் கொள்கின்றேன் உன்னிடம் நான்
கொஞ்சம் யோசி
நீயும் என்னைப்போல்
இருப்புக் கொள்வாயா என்று
பாவம் செய்யும் மனிதனைப்
படைத்து அதற்கு
பாவக் கறை நீக்கியையும்
தந்த இறைவனின் கட்டளை மறந்து
இன்னும் முடங்கி கிடக்கின்றாயே
இறை பிடி மிகப் பலமானது
இரண்டாவது பத்தில் இருக்கின்றேன்
தவ்பா செய்து மீண்டு கொள்
இன்னும் என்னை பூரணப்படுத்தி
குறை இன்றி வழி அனுப்பு
நாளை மறுமையில்
உன் ஒளி விளக்காய்
ரய்யான் வாயிலில்
நான் உனக்காக காத்திருப்பேன்
இப்படிக்கு நான் தான் ரமழான்
நிந்தவூர் றிசாமா
SEUSL
உனக்காய் வந்தேன் உன் வாசல் மிகுந்து வரவேற்றாய் பூரித்து போனேன் நாட்கள் நகருகின்றது உன்னை விட்டும் நான் விடை பெற நான் நகரும் நாட்கள் உன் பாவ அழிவுக்கே மனமுவந்து என்னை கடைசி வரை…
உனக்காய் வந்தேன் உன் வாசல் மிகுந்து வரவேற்றாய் பூரித்து போனேன் நாட்கள் நகருகின்றது உன்னை விட்டும் நான் விடை பெற நான் நகரும் நாட்கள் உன் பாவ அழிவுக்கே மனமுவந்து என்னை கடைசி வரை…