Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
இறைவன் மட்டுமே எங்களை காப்பவன் 

இறைவன் மட்டுமே எங்களை காப்பவன்

  • 12

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, மக்கள் இறைவனை மறந்து, பேச ஆரம்பித்துள்ளார்கள். இறைவன் நாடியது நடந்து விட்டது, நடக்கப் போகிறது.

கவலையை, பதட்டத்தை விட்டு விடுங்கள்! எப்போதும், என்றும், எங்கும் எம்மை காப்பவன் அந்த இறைவன் மாத்திரமே.

இறை நிராகரிப்பான வார்த்தைகளை தன்னரியாமல் பேசுவதை, தவிர்த்து, பின்வரும் பிரார்த்தனைகளை அதிகதிகமாக ஓத முயற்சிப்போம்.

لَا إِلَهَ إِلَّا اللهُ الْعَظِيمُ الْحَلِيمُ ، لَا إِلَهَ إِلَّا اللهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ ، لَا إِلَهَ إِلَّا اللهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الأَرْضِ ورَبُّ الْعَرْشِ الْكَرِيمِ

லாயிலாஹா இல்லல்லாஹூல் அழீமுல் ஹலீம் லாயிலாஹா இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம் லாயிலாஹா இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வரப்புல் அர்ளி வரப்புல் அர்ஷில் கரீம்

பொருள் : அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. அவன் மகத்தானவன் மிகவும் சாந்தம் உடையவன். அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரிய இறைவன் யாருமில்லை. அவன் மகத்தான அர்ஷின் அதிபதி! அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரிய இறைவன் யாருமில்லை. அவனே வானங்களுக்கும் அதிபதி பூமிக்கும் அதிபதி. சங்கைமிகு அர்ஷின் அதிபதியும் ஆவான்.

ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو فَلا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ ، لَا إِلَهَ إِلَّا أنْتَ

அல்லாஹும்ம ரஹ்மத்தக அர்ஜு ஃபலா தகில்னீ இலா நஃப்ஸீ தர்ஃபத்த ஐனின் வ அஸ்லிஹ்லீ ஷஃனீ குல்லஹு லாயிலாஹா இல்லா அனத்த.

பொருள் : யா அல்லாஹ் நான் உனது கருணையை எதிர்பார்க்கிறேன் கண் இமைக்கும் நேரத்திற்கு கூட நீ என்னை (உன் பொறுப்பிலிருந்து என் பொறுப்பில் விட்டு விடாதே! என் விவகாரங்கள் அனைத்தையும் எனக்காக நீ சீர்படுத்துவாயாக! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னை தவிர யாருமில்லை. (ஆதாரம் : அபூதாவூத்,அஹ்மத்)

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ

லாயிலாஹ இல்லா அன்த்த ஸுப்ஹானக்க இன்னி குன்த்து மினழ்ழாளிமீன்

பொருள் : வணக்கத்திற்குரிய இறைவன் உன்னை தவிர வேறு யாருமில்லை நீ தூய்மையானவன்! நிச்சயமாக நான் அநியாகாரர்களில் ஒருவனாக ஆகிவிட்டேன். (ஆதாரம் : திர்மிதி)

اللهُ اللهُ رَبِّي لَا أُشْرِكُ بِهِ شَيْئًا

அல்லாஹு அல்லாஹு ரப்பி லா உஷ்ரிக் பிஹி ஷை

பொருள் : அல்லாஹ்! அல்லாஹ்வே என் இரட்சகன் அவனுக்கு எதையும் நான் இணையாக்கமாட்டேன். (ஆதாரம் : அபூதாவூத், இப்னுமாஜா)

ஐய்யூப் அப்துல் வாஜித்
இன்ஆமீ

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, மக்கள் இறைவனை மறந்து, பேச ஆரம்பித்துள்ளார்கள். இறைவன் நாடியது நடந்து விட்டது, நடக்கப் போகிறது. கவலையை, பதட்டத்தை விட்டு விடுங்கள்! எப்போதும், என்றும், எங்கும் எம்மை காப்பவன் அந்த…

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, மக்கள் இறைவனை மறந்து, பேச ஆரம்பித்துள்ளார்கள். இறைவன் நாடியது நடந்து விட்டது, நடக்கப் போகிறது. கவலையை, பதட்டத்தை விட்டு விடுங்கள்! எப்போதும், என்றும், எங்கும் எம்மை காப்பவன் அந்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *