Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
எதிர் பார்ப்பின் விழித்தோன்றல்கள் பகுதி 21 

எதிர் பார்ப்பின் விழித்தோன்றல்கள் பகுதி 21

  • 9

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

பதில் ஸலாத்துடன் பாத்திமாஆஹ் வாங்க மதினி உங்களை தான் காத்துடு இருக்கம் இருங்க றுக்சி என்று பாத்திமா பேசிக் கொண்டு இருந்தாள். ருஷாவுக்கு தூக்க கலக்கம் அவளை குட்டி தூக்கம் ஏந்தியது. டொக் டொக்… கதவு தட்டிய சத்தம் குட்டி தூக்கம் போட்ட ருஷா திடீர் என்று பயந்து கண் விழித்தாள். நிசாத்தோ என்று அவள் மனம் அடித்துக் கொண்டது. மீண்டும் டொக் டொக்… பயத்தை மறைத்து வந்தால் என்ன பேசுற தான் என்று கதவை திறந்தாள்.

“என்ன பொண்ணு தூக்கமா..”

என்று றுக்சி,

“ஆமா வாங்க உள்ளுக்கு”

என்று ருஷா அழைத்து அமர வைத்தாள்.

“நான் யாரு என்று தெரியுமா,”

“இல்ல,”

“நான் பாத்திமாடா மதினி.”

“ஆஹ் நீங்க தானா நான் பார்த்த இல்ல தானே.”

“ம்ம் அது சரி அதான் இப்போ மீட் பண்ணியாச்சு தானே இனி வார போர இனி மதிக்கலாம்.”

என்று சொல்லி சிரித்தாள் றுக்சி,

“இப்போ டைம் ஒன்பது ஆகுது நாம மேகேந்தி போடுவம்.”

“ஆப்பேனவர் லேட் பண்ணி நீங்க போடி வோஸ் பண்ணி வாங்க அப்ரோம் ரெடி ஆகுற வெர்க் பார்க்கலாம். ஓகே வா ருஷா.”

“ம்ம் ஓகே”

என்று சொல்லி தலையாட்டினாள்.

“மேகேந்தி எங்க ருஷா.”

“இன்னா டேபிள இருக்கு”

என்று எடுத்து கொடுத்தாள். பூ கையை பூ டிசைனால் அலங்காரித்தாள் றுக்சி, நேரம் மருதாணி அலங்காரத்தோடு உருண்டது.

“றுக்சி”

என்று சொல்லி கொண்டு உள்ளே நுழைந்தாள் பாத்திமா.

“என்ன போட்டாச்சா,”

“போட்டாச்சு நல்லா இருக்கா மதினி.”

“ஆஹ் நைஸ் நீங்க பியூடிசியேன்லா பின்ன எப்டி இருக்கும்”

“மதினி போதும் போதும்…”

மூவரும் சிரிப்பில்,

“றுக்சி என்ன ரெஸ் பாங்சென்க்கு”

“நான் புரோக் கொண்டு வந்திருக்கன் மூணு கலர் பார்த்து செலக்ட் பண்ணுங்க பொண்ணுக்கு பிடிக்கணுமே,”

ஆடம்பரம் பிடிக்காத ருஷா தன் மனதால் இதை வெறுத்தாள். ஏன் எனில் பெண்ணை சோடித்து ஆண் பெண் என்று பலர் பார்க்க சோவ் வைப்பது தவறு. இன்னும் தன்னுடைய கணவன் ரசிக்க வேண்டிய அழகை அந்நிய ஆண் ரசிப்பது தவறு, இப்போதைய காலத்தில் பொண்ணை அலங்கரித்து மாப்பிள்ளை தோழர்கள் மணப்பெண்ணையும் மணமகனையும் நடுவில் வைத்து செல்பி, போட்டோ எடுக்கும் அந்நிய கலாச்சாரம் தலை தூக்கும் திருமணமாக தனது திருமணம் நடக்க கூடாது என்று இறைவனிடம் வேண்டியவள் அவள். இவ்வாறு தனக்கு நடந்து விடும் என்று யோசித்தாள். றுக்சியின் தும்மலில் அவள் யோசனை மங்கியது.

“ருஷா உங்களுக்கு என்ன ரெஸ் ஓகேனு சொல்லுங்க”

என்று ரெஸ்ஸை காட்டினாள். அவளுக்கு எது அழகு என்று வைத்து பார்த்தனர். றோஸும் கோல்டும் சேர்ந்த புரோக் அவளை இன்னும் தூக்கியது, அது அவளுக்கு பிடித்தது ஆனால் அவளின் மதினிமாருக்கு பிடிக்கா விட்டால் என்று அமைதி காத்தாள்.

“வாவ் மாஷா அல்லாஹ் பாத்திமா இந்த றோஸ் புரோக் ரொம்ப கியூட்டா இருக்கு.”

என்று சொல்ல

“ஆமா றுக்சி நானும் சொல்ல வாரன் நீ சொல்ற.”

“ருஷா உங்களுக்கு ஓகேவா, ஆமா மதினி எனக்கும் புடிச்சிருக்கு.”

“ஆஹ் அப்போ இது ஓகே.”

“பாத்திமா வட் டைம் நாம ரெடி பண்ணுற,”

“லுஹர் தொழுதுட்டு, ரெடி பண்ணலாம் மதினி”

“ஆஹ் அப்போ ஓகே மேக்கப் டைம் எடுக்கும் தானே அதான் கேட்டன்.”

என்று சொல்லி பேசி கொண்டு இருந்தார்கள்.

நிசாதின் தேடல் ருசாவாய் இருந்தது. ஆனால் மஹர் அவள் கையில் கொடுக்காமல் அவளை பார்ப்பதை தவறு என்று நினைத்தான். ஹலால் கொண்ட அவன் அந்த ஹலாலுக்கு உரிய மதிப்பை மெருகு படுத்தினான். சீர்கேட்டில் மிதக்கும் காதலும் மார்க்கத்தில் மிதக்கும் காதலும் கள்ளி பாலும் தூய பாலும் போல என்று வேறு படுத்திக் நோக்கினான் நிசாத்.

தொடரும்….
K.Fathima Risama
Nintavur.
SEUSL.
வியூகம் வெளியீட்டு மையம்

பதில் ஸலாத்துடன் பாத்திமாஆஹ் வாங்க மதினி உங்களை தான் காத்துடு இருக்கம் இருங்க றுக்சி என்று பாத்திமா பேசிக் கொண்டு இருந்தாள். ருஷாவுக்கு தூக்க கலக்கம் அவளை குட்டி தூக்கம் ஏந்தியது. டொக் டொக்……

பதில் ஸலாத்துடன் பாத்திமாஆஹ் வாங்க மதினி உங்களை தான் காத்துடு இருக்கம் இருங்க றுக்சி என்று பாத்திமா பேசிக் கொண்டு இருந்தாள். ருஷாவுக்கு தூக்க கலக்கம் அவளை குட்டி தூக்கம் ஏந்தியது. டொக் டொக்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *