Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஏப்ரல் 21 

ஏப்ரல் 21

  • 13

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

இயற்கை எழில் உடன்
நாற்பக்கமும் உவர் நீர்
ஊற்றெடுக்க
இன மத பேதமின்றி
இணைந்து இருந்த
அந்நேரம்

அழகாய் விடிந்தது
ஏப்ரல் 21
அதிகாலை
அவலத்துடன் முடிந்தது
அன்றைய மாலை

பயங்கரவாதிகள் என்ற
பட்டம் பெற்று
பட்டப்பகலில் பதற
வைத்தனர் இறை
சந்னிதானத்தில்

உயிர்த்த ஞாயிறு
உயிர்களை உருகுலைத்தது
உணர்வுகள் அற்ற
ஒரு சிலரால்

உவப்பாய் ஊர் சுற்ற
வந்த உல்லாசப் பயணிகளின்
உயிர் அற்ற
உடல்கள் உணவகத்திலே

உயிர்த்த ஞாயிறை
உயர்பிக்க வந்த
உறவுகள்
உயிர் அற்று கிடந்தன
தேவாலயங்களிலே

கொள்கைவாதிகளின் கொடூரம்
குற்றம் சுமத்தப்பட்டது
நடுநிலைமை சமூகம்
தலைகுனிந்து நிற்கிறது
நாதியற்று
வில்லங்கமான
காடையரின் கல்வீச்சில்

ஈராண்டு கடந்து போனது
கிடைக்குமா நீதி
நிலைக்குமா சமூகம்!

Rushdha Faris
South Eastern University of Sri Lanka.

இயற்கை எழில் உடன் நாற்பக்கமும் உவர் நீர் ஊற்றெடுக்க இன மத பேதமின்றி இணைந்து இருந்த அந்நேரம் அழகாய் விடிந்தது ஏப்ரல் 21 அதிகாலை அவலத்துடன் முடிந்தது அன்றைய மாலை பயங்கரவாதிகள் என்ற பட்டம்…

இயற்கை எழில் உடன் நாற்பக்கமும் உவர் நீர் ஊற்றெடுக்க இன மத பேதமின்றி இணைந்து இருந்த அந்நேரம் அழகாய் விடிந்தது ஏப்ரல் 21 அதிகாலை அவலத்துடன் முடிந்தது அன்றைய மாலை பயங்கரவாதிகள் என்ற பட்டம்…