ஒன்லைன் கல்வி முறைமைக்கு எதிராக முறைப்பாடு
- by admin
- 12
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ உள்ளிட்ட சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அனுராதபுரம் அலுவலகத்தில் இன்று இந்த முறைப்பாட்டை மேற்கொண்டனர்.
02 வருடங்களாக மாணவர்கள் கல்வியை தொடர்வதற்கான சந்தர்ப்பம் அற்றுப்போனமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் தனது முறைப்பாட்டில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
புகார் குறித்து தலைவர் பிரியந்த பெர்னாண்டோ கூறுகையில்,
கொரோனா தொற்று பரவல் காரணமாக 2020 மார்ச் 20 முதல் பாடசாலை மூடப்பட்டன. பின்னர் இடைக்கிடை பாடசாலைகள் திறக்கப்பட்டிருந்தாலும், சுமார் 43 இலட்சம் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை இழந்துள்ளனர்.
2020 ஆம் ஆண்டு பாடசாலை 203 நாட்கள். அதில் பாதிநாட்கள் கடந்து பாடசாலைகள் நடத்தப்பட்டன. இதன் விளைவாக மாணவர்களின் கல்வி வாய்ப்பு இழந்தது. மேல் மாகாணத்தைத் தவிர அனைத்து மாகாணங்களிலுல் இந்நாட்களில் பாடசாலைகள் நடாத்துவதற்கு 110 நாட்கள் இருந்தன. ஆனால் பாடசாலைகள் சுமார் 60 நாட்களாக நடைபெற்றுள்ளன.
பாடசாலைக்கு அரைவாசி குழந்தைகளை அழைத்து வரும் செயல்முறையால், மாணவர்கள் 80 நாட்களை இழந்துள்ளனர். மேல் மாகாணத்தில் மாணவர்களுக்கான பாடசாலைகள் ஒரு மாதத்திற்கும் குறைவாகவே இயங்கியுள்ளன. 2021 இல் பள்ளிக்குள் நுழைந்த முதலாம் வகுப்பு மாணவர்கள் இரண்டு நாட்கள் பாடசாலைக்கு சென்றுள்ளனர்.
பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில், தொலைக்கல்வி முறைக்கு (ஓன்லைன) கல்வி அமைச்சு முறையான திட்டத்தை செயல்படுத்தவில்லை. இதன் விளைவாக குழந்தைகள் கல்வி வாய்ப்புகளை இழந்துவிட்டனர். ஆனால் இந்த முறை ‘வெற்றிகரமாக’ இருப்பதாக அதிகாரிகள் கருத்தொன்றை உருவாக்கி வருகின்றனர்.
தலைவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்த கடிதத்தில், நம் நாட்டில் கணினி கல்வியறிவு விகிதம் 30.3 சதவீதமாகும், இது நகர்ப்புறங்களில் 47.4 சதவீதமும், கிராமப்புறங்களில் 28.5 சதவீதமும், தோட்டத் துறையில் 12.27 சதவீதமும் ஆகும். மேலும், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் மக்கள் தொகையில் 46 சதவிகிதம் என தெரிவித்தார்.
‘சமிக்ஞை நிலை (Signal) , தரவு பெறுதல் (Data), ஆன்லைன் கல்வியுடன் பெற்றோரின் நிலை’ மற்றும் பல சிக்கல்கள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள், ஆசிரியர்கள் அல்லது பெற்றோரை பாதிக்காத அமைப்பில் அனைவருக்கும் அணுகக்கூடிய ஒரு பயனுள்ள கல்வி முறையைகல்வி அமைச்சு, செயல்படுத்துமாறு ஆசிரியர் சங்கம் கேட்டு கொண்டது. LNN Staff
அனைத்து மாணவர்களுக்கும் ஒன்லைன் கல்வி சம அளவில் கிடைக்காமையால் மாணவர்களின் உரிமைகள் மீறப்படுவதாக தெரிவித்து இலங்கை ஆசிரியர் சங்கம், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று (28) முறைப்பாடு செய்துள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர்…
அனைத்து மாணவர்களுக்கும் ஒன்லைன் கல்வி சம அளவில் கிடைக்காமையால் மாணவர்களின் உரிமைகள் மீறப்படுவதாக தெரிவித்து இலங்கை ஆசிரியர் சங்கம், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று (28) முறைப்பாடு செய்துள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர்…