Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
கனவுகளை கலையாதீர் 

கனவுகளை கலையாதீர்

  • 11

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

கனவுகளில் கண் மலர்ந்தாள்
கடற்கரை ஓரத்தில்!
கனவுகள் நனவாகும் முன்னே
கலைத்தது – ஓர் பேரலை
கனவுகள் கற்பனையாக
கானல் நீரானது
அக்கன்னி வாழ்க்கை!

முழு மதியான அவள் வாழ்வில்
முள் போன்ற கனவுகள்!
முறையான பெண் வாழ்வை
முறியடித்த தருணங்கள்
முடங்கிப் போனாள்
பெண் அவளோ!
முகம் காட்ட முடியாமல்

இருந்தும் தோற்கவில்லை!
இறைவன் மேல் நம்பிக்கை
இறைவனடி அவள் சாய்ந்தாள்
இறையச்சம் கொண்டதனால்!

இராக்கள் பல கழிந்தன!
இதயமும் இருகின!
தன்னம்பிக்கை தலையோங்க
தலை நிமிர்ந்தாள்
அம் மாது!

தன் கனவுக் கோட்டையை
தகர்த்தவர்கள் முன்னிலே
தனி மரமாய் நின்று
தவறுகளை தகர்த்தெரிந்து
தடம் பதித்தாள் அவள்
தகர்க்க முடியா விருட்சகமாய்!

Shima harees
puttalam

கனவுகளில் கண் மலர்ந்தாள் கடற்கரை ஓரத்தில்! கனவுகள் நனவாகும் முன்னே கலைத்தது – ஓர் பேரலை கனவுகள் கற்பனையாக கானல் நீரானது அக்கன்னி வாழ்க்கை! முழு மதியான அவள் வாழ்வில் முள் போன்ற கனவுகள்!…

கனவுகளில் கண் மலர்ந்தாள் கடற்கரை ஓரத்தில்! கனவுகள் நனவாகும் முன்னே கலைத்தது – ஓர் பேரலை கனவுகள் கற்பனையாக கானல் நீரானது அக்கன்னி வாழ்க்கை! முழு மதியான அவள் வாழ்வில் முள் போன்ற கனவுகள்!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *