வார்த்தையில் பக்குவத்தை கற்றுக் கொள்
- by admin
- 7
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
பயனில்லாத வார்த்தைகளும் உண்டு. ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும் மௌனங்களும் உண்டு. சிலநேரம் பேசுவது அழகு. சிலநேரம் மௌனிப்பது அதை விட அழகு.
“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்பவர் நல்லதைப் பேசவும் அல்லது மௌனமாக இருக்கட்டும்.”
என்ற நபிமொழி எவ்வளவு ஆழமானது அர்த்தமுடையது நமக்குத்தான் புரியவில்லை போலும்.
நாம் முரண்படுவது, மன்னிப்புக் கேட்பது, கண்டிப்பது, இணைவது, பிரிவது அனைத்தும் இயல்பானவையே. ஆனால் அழகு என்னவென்றால் நளினமாக முரண்படுவதும் பணிவுடன் மன்னிப்புக் கேட்பதும் மென்மையாகக் கண்டிப்பதும் அன்புடன் இணைவதும் நட்புடன் பிரிவதும் தான் அதுதான் முதிர்ச்சி அதுதான் பக்குவம்.
விரோதங்கள், குரோதங்களை கக்குவதும் பொறாமையினால் பொரிந்து தள்ளுவதும் தேவையற்ற விடயங்களைப் பேசுவதும் வெறுப்பினால் வேறொருவரை கேவலம் செய்வதும் முஸ்லிமின் பண்புமல்ல அறிவின் அடையாளமுமல்ல. அப்படிச் செய்தால் நீ பின்வரும் ஹதீஸைக் கவனிக்கவும்.
“ஒருவர் தம் சகோதர முஸ்லிமைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக்குப் போதிய சான்றாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்ற முஸ்லிம்களின் உயிர், பொருள், மானம் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும்” ஹதீஸ்
உனக்கு அல்லாஹ் நேர்வழியைக் காட்டி அருள் புரிவானாக.
பாஹிர் சுபைர்
பயனில்லாத வார்த்தைகளும் உண்டு. ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும் மௌனங்களும் உண்டு. சிலநேரம் பேசுவது அழகு. சிலநேரம் மௌனிப்பது அதை விட அழகு. “அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்பவர் நல்லதைப் பேசவும் அல்லது மௌனமாக…
பயனில்லாத வார்த்தைகளும் உண்டு. ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும் மௌனங்களும் உண்டு. சிலநேரம் பேசுவது அழகு. சிலநேரம் மௌனிப்பது அதை விட அழகு. “அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்பவர் நல்லதைப் பேசவும் அல்லது மௌனமாக…