Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
கற்பனைக் கனவு 

கற்பனைக் கனவு

  • 10

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

கவர்ந்தீர்க்கும் மாலை பொழுதில்
மங்கலான வெளிச்சத்தில்
முழு மதியின் வருகையில்
சாய்ந்து கொண்டேன்
என்னவன் தோல்களில்!

பட்சிகளின் சப்தத்தில்
நுரைகளின் சிதறலில்
மீன்கள் துள்ளிட
நடந்து சென்றேன்
அழகனின் கரம் பிடித்து

யாருமில்லா நிசப்தத்தில்
அலைகளின் தழுவலில்
குளிரான தென்றலிலும்
வியர்வையால் மூழ்கினேன்
அவனது மூச்சுக் காற்றில்!!!

கதிரோனின் மறைவினில்
மலர்மாலை வாசத்தில்
விழிகளின் சங்கமத்தில்
கன்னங்கள் சிவந்திட
தலை குனிந்தேன்
அவனது தீண்டலில்!

எதிர் பாரா நேரத்தில்
எதிர் முனையில் ஏற்பட்ட
அலைபேசி அலறலிலே
அதிர்ந்து நின்றேன்
அவை என் கனவென்று!

நனவிலே நிகழாத
கற்பனை நிகழ்வொன்று
கனவிலேனும்
நிகழ்ந்ததென்னி
கண் மலர்ந்தேன்
கண்ணீருடன்!

Shima Harees
Puttalam

கவர்ந்தீர்க்கும் மாலை பொழுதில் மங்கலான வெளிச்சத்தில் முழு மதியின் வருகையில் சாய்ந்து கொண்டேன் என்னவன் தோல்களில்! பட்சிகளின் சப்தத்தில் நுரைகளின் சிதறலில் மீன்கள் துள்ளிட நடந்து சென்றேன் அழகனின் கரம் பிடித்து யாருமில்லா நிசப்தத்தில்…

கவர்ந்தீர்க்கும் மாலை பொழுதில் மங்கலான வெளிச்சத்தில் முழு மதியின் வருகையில் சாய்ந்து கொண்டேன் என்னவன் தோல்களில்! பட்சிகளின் சப்தத்தில் நுரைகளின் சிதறலில் மீன்கள் துள்ளிட நடந்து சென்றேன் அழகனின் கரம் பிடித்து யாருமில்லா நிசப்தத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *