குரங்கு மனசு பாகம் 02
- by admin
- 5
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
“உம்மா”
“என்னம்மா?”
பொம்புள புள்ள, பொம்புள புள்ளன்னு பாடி பாடி இருந்தீங்களே! புள்ளய கண்டதும் என்னம்மா சைலன்ட்?” பக்கத்தே இருந்த தன் தாயிடம் சர்மி வினவ,
“இல்லம்மா.. இந்த நேரம் உன் புருஷனோட பெமிலியும் இருந்தா ரொம்ப சந்தோஷமா இருக்குமே! தப்பு பண்ணிட்டோம்மா.”
“ஐயோ! அத விடுங்க உம்மா, தன்னோட பேரன் பேத்தி மேல அவங்களுக்கு பாசம் இருந்தா மூத்தவன் கெடச்ச நேரமே வந்திருப்பாங்க, இப்போ எங்கமா அவங்க வர போற?”
“அப்புடி சொல்லாத புள்ள தப்பு செஞ்சது நாம தான்.”
“உம்மா பிளீஸ் இந்த சந்தோஷமான நேரத்துல அவங்க கத வேணாம்.”
தாய் ராபியா தன் வாயை மூடிக் கொள்ள சிறிது நேரம் நிசப்தம் நீண்டது..
“மிஸீஸ் சர்மி…?
“யெஸ் டொக்டர்”
“யூ ஓல் ரெய்ட்.. யூ கென் கோ ஹோம்!”
“ஓகே..”
சந்தோஷத்துடன் தாயைப் பார்த்தவள்
“ஹஹ்! உம்மா டிஸ்சார்ஜ் பண்ணிட்டாங்க, அதுக்குள்ள இந்த மனிஷன் எங்க போனாரு?” என்று கூறிக் கொண்டே கண்களால் கணவனை தேடினாள் சர்மி.
“இங்க தான் இருந்தாரு ஏதும் வெளிய போய் இருப்பாரு”
தாய் ராபியா சொல்லிக் கொண்டிருக்கும் போதே வந்து சேர்ந்தான் அதீக்..
“எங்க போனீங்க? இல்ல அதுவந்து எங்க உம்மாக்கு கோல் பண்ண போனன் சர்மி” மனைவியிடம் மறைக்க விரும்பாதவனாய் தயக்கத்துடன் சொல்ல,
“என்னா? வாராமா உங்க உம்மா?” எடுத்த எடுப்புக்கே கேட்டு விட்டாள் சர்மி,
“சொல்றது என் கடம வந்தா பார்ப்போம்” போலிச் சிரிப்பொன்றை வரவழைத்துக் கொண்டு பதில் கொடுத்தான் அதீக்.
“அவ எங்க வர போற? அவக்கு தான் இப்போ நீங்க மகனே இல்லன்னு சொல்லிட்டாவே,., உங்கள அவ வயித்தால பெத்ததுக்கு வெக்கப் பட்றாவாமே, இன்னமும் நீங்க எதுக்கு??”
“சர்மி பிளீஸ் இதுக்கு மேல எதுவும் பேசாத, இந்த புள்ளய பெத்து எடுக்க நீ பட்ட கஷ்டம், என்ன பெக்கவும் என் உம்மா பட்டு தான் இருக்கு, அவ கவலைல சொன்னது எல்லாம் திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்காத..”
“ஹ்ம்ம் நீங்களாச்சி உங்க உம்மாவாச்சி நான் எதுவும் சொல்லல்லபா…”
“எல்லாம் உனக்காக தான் சர்மி, அத மனசுல வெச்சிக..”
இதற்கு மேல் பேச்சுக் கொடுப்பது முறையல்ல என்பதை புரிந்து கொண்ட சர்மி, தன் கணவனின் கவலைகளை வாங்கிக் கொள்ளாமல் அலட்சியமாய் பதில் கொடுத்தது தவறு தான்.
“சரி வாகனம் வந்துட்டு.. சாமான் எல்லாம் ஏத்துங்க.. நான் டொக்டர் கூட பேசி மீதி வேல எல்லாம் முடிச்சிட்டு வாரன்” அங்கிருந்த உறவுக்காரர்களுக்கு கட்டளை போட்டு விட்டு அகன்றான் அதீக்..
“உம்மா நீங்க புள்ளய தூக்குங்க..”
“இல்ல இல்ல அவள உன் புருஷன் தூக்கட்டும்… நீ வா நான் உன்ன புடிச்சி கூட்டிட்டு போறன்.”
“ஐயோ!! உம்மா.. சொல்றத செய்ங்களே!”
“என்ன பொம்புள இவள்..”
மகளுக்கு கேட்காமல் மனதால் முனுமுனுத்துக் கொண்டே பிள்ளையை வாரி அணைத்துக் கொண்டாள். அதற்குள் வேலையெல்லாம் முடித்துக் கொண்டு அதீக் வந்துவிட
“ஹபீ..”
“என்னம்மா?”
கையை நீட்டி தன் கணவனுக்கு தன்னைப் பற்றிக் கொள்ளச் சொன்னாள் சர்மி..
“ஹே! ஓகே டார்லிங்”
பத்திரமாய் மனைவியைப் பற்றிக் கொள்ள, தாயைப் பார்த்து சிரித்த சர்மி, கணவனின் கைபிடித்து வாகனத்தை நோக்கி நடை போட்டாள்..
“ஐ யம் சொறி ஹபி
“வை டா?”
“உங்கள புரிஞ்சிகாம பேசிட்டன் அது தான்..”
“அத விடு சர்மி மனைவியா நீ யோசிக்குறதுலயும், தாயா என் உம்மா யோசிக்குறதுலயும் தப்பு இல்ல என் மகனுன்னு அவ பார்க்குறா, என் புருஷன்னு நீ பாக்குற அவ்வளவு தான்”
ஹ்ம்ம்ம் மௌனமே சர்மியின் பதிலாக..
“இட்ஸ் ஓகே! இந்தவாட்டி அவங்க வரல்லன்னா, நம்ம ரெண்டு குழந்தையோட நாம போய் பேசிட்டு வரோம்..”
கணவனின் எதிர்பார்க்கா அந்த வார்த்தை கேட்டு திடுக்கிட்ட சர்மி, அடுத்த கணமே அவன் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள்.
கதை தொடரும்…
Aathifa Ashraf
“உம்மா” “என்னம்மா?” பொம்புள புள்ள, பொம்புள புள்ளன்னு பாடி பாடி இருந்தீங்களே! புள்ளய கண்டதும் என்னம்மா சைலன்ட்?” பக்கத்தே இருந்த தன் தாயிடம் சர்மி வினவ, “இல்லம்மா.. இந்த நேரம் உன் புருஷனோட பெமிலியும்…
“உம்மா” “என்னம்மா?” பொம்புள புள்ள, பொம்புள புள்ளன்னு பாடி பாடி இருந்தீங்களே! புள்ளய கண்டதும் என்னம்மா சைலன்ட்?” பக்கத்தே இருந்த தன் தாயிடம் சர்மி வினவ, “இல்லம்மா.. இந்த நேரம் உன் புருஷனோட பெமிலியும்…