குரங்கு மனசு பாகம் 33
- by admin
- 11
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
“புள்ள… இ… இது?”
“என்னோட பெயர் மா…”
“என்னம்மா? என்ன புள்ள நடக்குது?”
“எனக்கு ஒன்னுமே புரியல்லம்மா..”
“அதீக் உனக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கான் சர்மி”
அவளால் நம்ப முடியவில்லை.
“இது வெறும் கனவா போயிடாதே உம்மா?”
“ஏன் புள்ள அப்படி யோசிக்குற? அல்லாஹ் உன்ன எந்தநாளும் கஷ்டத்துலயே இருக்க செய்ய மாட்டான். நிச்சயமா துன்பத்துக்கு பின்னால இன்பம் இருக்குன்னு சும்மா சொல்லி இல்லயே சர்மி.”
“அப்போ என்னோட அதீக் எனக்கு கிடைக்கப் போறானா?”
அவளின் இதழ்கள் நீண்ட காலத்துக்குப் பின் அப்பொழுது தான் உண்மையாய் சிரித்துக் கொண்டன. ஆனந்தம் மேலிட அந்த அழைப்பிதலைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். அந்நேரம் பார்த்து, ரினோஸ் சர்மிக்கு அழைப்பு செய்தான்.
“ஹலோ நான் ரினோஸ். அதீகோட பிரன்ட்,”
“ஓம் சொல்லுங்க…”
“என்ன ரொம்ப ஹெபி போல??” பதிலுக்கு மௌனமாய் இருந்தாள் சர்மி.
“எல்லாம் இரகசியா இருக்கட்டுமேன்னு தான். நீங்க அதீக் கு மெசேஜ் பண்ணிருந்ததா சொன்னான். உங்க நினைவா இருக்குற அவனுக்கு அந்த சந்தோஷம் போதவா இனி? அடுத்த நிமிஷமே எனக்கு கோல் பண்ணி இருந்தான். நான் தான் கொஞ்சம் பொறுமையா இருக்க சொன்னன்.”
“ஓஹ்…”
“அப்புறம் இன்னொரு விஷயம் சர்மி இந்த வெடிங்காட் ஒன்னும் உண்மையா தயாரிக்கப் பட்டதில்ல…”
“நீங்க.. நீங்க என்ன சொல்ல வாரீங்க” பதறிப் போனாள் சர்மி.
“ஹே கொஞ்சம் பொறுமையா கேளுங்க. இது உங்களுக்காக மட்டும் வடிவமைக்கப் பட்டது. அதீக் ஸப்ரைஸ் ஆஹ் லவ் பிரபோஸ் பண்ணி இருக்கான். இன்னமும் இந்த விஷயமா யாருக்கும் தெரியாது. அப்போ இது கை கூடுமா?”
“அதீக் தன் வீட்டுல இப்போ தான் இது விஷயமா பேசப் போறான். எல்லாம் நல்லபடியா முடிய துஆ செஞ்சி கோங்க.”
“கட்டாயமா செஞ்சிக்குவன். எனக்கு என் அதீக் வேணும்.”
“அத அப்பவே சொல்லிருந்தா இவ்வளவு தூரம் எதுவும் நடந்திருக்காதே?”
“பிலீஸ் பண்ணி முடிஞ்சதுகள பேசாதிங்க.”
“ஓகே ஓகே நான் வெச்சுட்றன். அதீக் இப்போ உம்மா கூடப் பேசிட்டு எனக்குத் தான் கோல் பண்ணுவான்.”
“ஹ்ம்ம் நல்லது. ரொம்ப தேங்க்ஸ்”
“அது எல்லாம் சரி வராது பார்ட்டீ ரெடி பண்ணுங்க.”
நகைச்சுவையாய் சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்தான்.
“என்ன புள்ள யாரும்மா போன்ல?”
தன் மகளின் வாழ்வில் விடிவு கிடைக்கப் போகும் சந்தோஷத்தில் ராபியாவுக்கு கை, கால் விளங்கவில்லை. அதீகின் நண்பன் ரினோஸ் சொன்ன சந்தோஷமான விடயங்களை பகிர்ந்து கொண்ட சர்மி, அதீகுடன் வாழ்க்கைப்படும் தருணம் எண்ணி கற்பனை உலகத்தில் மிதந்து போனாள்.
“நிச்சயமா என்னோட லய்ப் ல இனி எல்லாமே சந்தோஷமாத் தான் அமையப் போகுது”
என ஆண்டவனிடம் நன்றிக்காய் உயர்ந்த அவள் உள்ளம் நொறுங்கிப் போக வெகுநேரம் செல்லவில்லை. அகம் நிறைந்த சந்தோஷத்தோடு யன்னல் வழியாக வீட்டுத் தோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தவள் தன் உள்ளக் கிடக்கைக்கு எமனாக தன் வீடு நோக்கி வந்து கொண்டிருந்த அவ் உருவத்தை உற்று நோக்கினாள்.
“யாரது?”
ஆம் சற்று குள்ளமான ஓர் பெண் உருவம். பார்க்க பெரிய இடத்தவர் போன்ற ஆடையமைப்பு, வேகமான நடையுடனே ஏதோ மதம் கொண்ட யானையைப் போல் அவளின் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தது வேறு யாருமல்ல அதீகின் தாய் வாஹிதா தான்.
கதை தொடரும்…
Aathifa Ashraf
“புள்ள… இ… இது?” “என்னோட பெயர் மா…” “என்னம்மா? என்ன புள்ள நடக்குது?” “எனக்கு ஒன்னுமே புரியல்லம்மா..” “அதீக் உனக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கான் சர்மி” அவளால் நம்ப முடியவில்லை. “இது வெறும் கனவா…
“புள்ள… இ… இது?” “என்னோட பெயர் மா…” “என்னம்மா? என்ன புள்ள நடக்குது?” “எனக்கு ஒன்னுமே புரியல்லம்மா..” “அதீக் உனக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கான் சர்மி” அவளால் நம்ப முடியவில்லை. “இது வெறும் கனவா…