குரங்கு மனசு பாகம் 55
- by admin
- 16
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
“ஹபி என்ன விட்டு எங்கயும் போயிட மாட்டீங்களே?”
“ஏன்டா உனக்கு இப்புடி ஒரு டவுட், நீ என்னோட பொண்டாட்டி. உன்னவிட்டு நான் எங்கம்மா போகப் போறன்?” பதிலுக்கு இலேசாக புன்னகைத்தாள் சர்மி.
“அது சரி, என்மேல இருக்குற கோவத்துல ஏன் உன்ன கஷ்டப் படுத்திக் கொள்ற சர்மி?”
“அப்புடி இல்ல ஹபி”
“என்ன இல்லாம?? நீ காலையில இருந்து எதுவும் சாப்பிடல்ல, அதனால என் குட்டி பாப்பாவும் பசியில கிடந்து இருக்கு” சோகமாய் முகத்தை வைத்துக் கொண்ட கணவன் மனைவி மீது குற்றம் பிடிக்க,
“குட்டி பாப்பா வா?” ஒன்றும் புரியவில்லை சர்மிக்கு. பதிலுக்கு மனைவியின் கையைப் பற்றியவன், அவள் கைகளாலேயே அவள் வயிற்றை வருடி விட்டான்.
“இங்க இருக்கு என் தேவதக் குட்டி”
“உண்மயாவா சொல்லுறீங்க ஹபி?”
“நான் எதுக்குமா பொய் சொல்லப் போறன்..” சர்மிக்கு வருத்தங்கள் எல்லாமே தீர்ந்து போன உணர்வு எழுந்தது. மெதுவாக மீண்டும் தன் வயிற்றை வருடி விட்டவளுக்கு அப்பொழுது தான் மூத்தவன் நினைவு வந்தது.
“ஹபி, நம்ம பையன் எங்க?”
“ஆஹ் மாமி கூட இருக்கானே.. வாங்க நாம போவோம், உங்கள வாகனத்துல விட்டுட்டு நான் போய் சாப்பிட எடுத்து வாரன்” சரியென்பதாய் தலையாட்டிய சர்மி, கணவனைப் பற்றி மெதுவாக நடந்தாள்.
அங்கு தாயுடன் இருந்த சின்னவன் சர்மியைக் கண்டதும் ஆனந்தம் பொங்க ஓடி வந்து பெற்றவளின் கால்களை கட்டிப்பிடித்துக் கொண்டான்.
“என்னடா செல்லம்?”
“யே உம்மீ நான் பேசப் பேச பேசாம தூங்கிட்டு இருந்தீங்க?” தனக்குரிய மழலை மொழியில் ஏக்கமாய் சின்னவன் கேட்க,
“ஐ யம் சொறி டா கண்ணு” மகனைத் தூக்கி முத்தம் கொடுத்து மன்னிப்புக் கேட்டாள்.
“மாமி, அந்தா அங்க வாகனம் நிறுத்தி இருக்கன், நீங்க இவங்கள கூட்டிட்டுப் போங்க. நான் சர்மிக்கு சாப்பிட ஏதும் எடுத்து வாரன்.”
“சரி மகன்…”
“அபி நானும் வாரன்” தந்தையோடு கடைக்குப் போனால் ஏதும் வாங்கிக் கொள்ளலாம் என்ற நினைப்பில் தொத்திக் கொண்டான் மகன். அதீகும் எவ்வித மறுப்புமின்றி அவனைத் தூக்கிக் கொள்ள, சர்மியும், ராபியாவும் வாகனத்தில் ஏறிக் கொண்டனர். மனதெல்லாம் தன்னவனை தாங்கியிருந்த சர்மி, தனக்காக பிரயத்தனம் கொள்பவனை தப்பாக எண்ணிவிட்ட வருத்தத்தோடு அங்கே அமர்ந்திருந்தாள்.
“சர்மிம்மா இந்தாங்க இத சாப்பிடுங்க, மாமி நீங்களும் சாப்பிடுங்க..” கையில் கிடந்த சாப்பாட்டுப் பொதியை மனைவியிடம் கொடுக்க,
“ஹே அபி எனக்கு லொலிபாப் வாங்கித் தந்தாமே!” ஆனந்தத்துடன் ராபியாவின் மடியில் அமர்ந்து கொண்டான் சின்னவன்.
ஒருவாறு வீடு வந்தடைய, பத்திரமாய் மனைவியை பிடித்து உள்ளே கூட்டிச் சென்றான் அதீக். ஏதோ எண்ணத்தில் சின்ன மகனை ராபியா தன்னறையில் வைத்துக் கொண்டு விளையாட்டுக் காட்ட, கணவனும் மனைவியுமாம் உள் சென்ற அறை பூட்டி தாழிடப் படுகின்றது.
கதை தொடரும்…
Aathifa Ashraf
“ஹபி என்ன விட்டு எங்கயும் போயிட மாட்டீங்களே?” “ஏன்டா உனக்கு இப்புடி ஒரு டவுட், நீ என்னோட பொண்டாட்டி. உன்னவிட்டு நான் எங்கம்மா போகப் போறன்?” பதிலுக்கு இலேசாக புன்னகைத்தாள் சர்மி. “அது சரி,…
“ஹபி என்ன விட்டு எங்கயும் போயிட மாட்டீங்களே?” “ஏன்டா உனக்கு இப்புடி ஒரு டவுட், நீ என்னோட பொண்டாட்டி. உன்னவிட்டு நான் எங்கம்மா போகப் போறன்?” பதிலுக்கு இலேசாக புன்னகைத்தாள் சர்மி. “அது சரி,…