குழந்தைக் கலி
- by admin
- 8
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
குழந்தைக்கலி தீர்க்க வந்த
பால் மணக்கும் குஞ்சரமே
தரையில் தவழும் தங்கப்படகாய்
தரணி கண்ட சத்தியமே
சீராட்டிப் பாராட்டி நானும்
நிலாக்காட்டி சோறூட்டி
மைதீட்டி முடிக்கையிலே
வண்ண முழி முழிச்சிடுவாய்
கொஞ்சும் போது நீயும் சிரிக்கையிலே
முந்திச் சிந்தும் சாரல் மழை
முத்துக்களை உதிர்த்திடுமே
பித்தாகி மனம் லயித்திடுமே
பத்து வர்ணப் பட்டெடுத்து
சித்திரத் தொட்டில் கட்டி
தாலாட்டி நீ உறங்க
சிந்தையதும் மகிழ்ந்திடுமே
நெஞ்சினை நெகிழ்க்கும்
முத்தங்கள் தந்தே
பிஞ்சு மொழியால்
தஞ்சம் கொள்ளச் செய்திடுவாய்
வெள்ளிச் சிறுசலங்கையோடு
நடந்து வரும் தடம் பார்த்து
அள்ளிக் கொள்ளத் தோன்றிடுமே
கொள்ளைப் பெருமிதங்கள் சொரிந்திடுமே
உன்னால் கொள்ளைப் பெருமிதங்கள்
சொரிந்திடுமே.
நிலாக்கவி நதீரா முபீன்
புளிச்சாக்குளம்
புத்தளம்
குழந்தைக்கலி தீர்க்க வந்த பால் மணக்கும் குஞ்சரமே தரையில் தவழும் தங்கப்படகாய் தரணி கண்ட சத்தியமே சீராட்டிப் பாராட்டி நானும் நிலாக்காட்டி சோறூட்டி மைதீட்டி முடிக்கையிலே வண்ண முழி முழிச்சிடுவாய் கொஞ்சும் போது நீயும்…
குழந்தைக்கலி தீர்க்க வந்த பால் மணக்கும் குஞ்சரமே தரையில் தவழும் தங்கப்படகாய் தரணி கண்ட சத்தியமே சீராட்டிப் பாராட்டி நானும் நிலாக்காட்டி சோறூட்டி மைதீட்டி முடிக்கையிலே வண்ண முழி முழிச்சிடுவாய் கொஞ்சும் போது நீயும்…