நீதி நிலைகுலைந்ததில் வந்ததோர் சேதி
- by admin
- 10
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
சட்டம் பேசும் பலரும் சந்தர்ப்பம் அறிவதில்லை
தம் இஷ்டப்படி பேசி
பிறருக்கு நஷ்டத்தை விளைக்கின்றனர்
குற்றவாளிக்கூண்டில் சுற்றவாளியும் நிருத்தப்படலாம்
வதாட்டம் வரையறையற்ரிருந்தால்
அவன் வாழ்கையே திண்டாட்டமாகலாம்
மெய்க்குற்றவாளிக்கு
கொண்டாட்டமாகலாம்
வாயில்லாப் பூச்சுக்கலாய்
வாதாட – வந்தவரை நம்பி நிற்க
வள்ளலைப்போல் வாரி இறையென்று
வாய்கூசாமல் வேண்டிநிற்பர்
துண்டாடியவனுக்கு தூக்குக் கயிறு – அதை
தூண்டியவனுக்கு நிரம்பிடும் வயிறு
திருட்டுப்பட்டம் கட்டமுன்- அவன்
தினசரி வாழ்வாதாராத்தில் நோட்டம் கொள்
தப்பித்தவன் நல்லவனுமில்லை
தண்டித்தவன் அயோக்கியனுமில்லை.
தட்டிப் பறித்தவனுக்கு விருந்து
தண்டனை அனுபவிப்பவனுக்கு என்ன மருந்து
தோற்றுப் போன நீதியை
தோற்றுவித்தவன் மேல் கோபம்தான்
சிறைபிடிக்கபட்டவன் பீதியில்
அவனுக்கு தினம் சாபம் தான்
வறுமை ஒரு காரணம்
அறியாமை மறு காரணம்
ஆயுள் ஒரு தோரனை
அதில் அகப்பட்டவன் நிலை வேதனை
இறந்த நீதியே
உன்னோடு பேச வந்து
உன்தொடர் உறவுகளோடு பேசுகிறேன்
இதுவும் ஒரு வித அலட்சியம் தான்
நீ தோற்றுப்போனதன் பின்பாக
Asana Akbar
Anuradhapura
SEU Of Srilanka
சட்டம் பேசும் பலரும் சந்தர்ப்பம் அறிவதில்லை தம் இஷ்டப்படி பேசி பிறருக்கு நஷ்டத்தை விளைக்கின்றனர் குற்றவாளிக்கூண்டில் சுற்றவாளியும் நிருத்தப்படலாம் வதாட்டம் வரையறையற்ரிருந்தால் அவன் வாழ்கையே திண்டாட்டமாகலாம் மெய்க்குற்றவாளிக்கு கொண்டாட்டமாகலாம் வாயில்லாப் பூச்சுக்கலாய் வாதாட –…
சட்டம் பேசும் பலரும் சந்தர்ப்பம் அறிவதில்லை தம் இஷ்டப்படி பேசி பிறருக்கு நஷ்டத்தை விளைக்கின்றனர் குற்றவாளிக்கூண்டில் சுற்றவாளியும் நிருத்தப்படலாம் வதாட்டம் வரையறையற்ரிருந்தால் அவன் வாழ்கையே திண்டாட்டமாகலாம் மெய்க்குற்றவாளிக்கு கொண்டாட்டமாகலாம் வாயில்லாப் பூச்சுக்கலாய் வாதாட –…