கொரோனாக் கொடுமையினால் கொதிக்கும் மாந்தனே!
- by admin
- 17
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
ஓடி உழைத்தாய் ஆடித்திரிந்தாய்
ஆணவங் கொண்டாய்
அகிலத்தையே வெல்லப் பார்த்தாய்
அறநெறிகளை மறந்து,
அசிங்கமான வாழ்க்கைக்கு இசைந்தாய்
சதித்திட்டங்களை தீட்டி,
சட்டங்களையே மறந்து விட்டாய்
சமயத்தை தூரமாக்கி ,
சாத்தானை நண்பனாக்கி
சாந்தியையே விரட்டியடித்தாய்
கொடுமைகள்! கொடுமைகள்
தாங்க இயலவில்லையே
கொரோனா என்றொரு வைரஸ்
கொந்தளித்து எழுந்து விட்டதே
கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்து
கொள்ளை நோயாம் நுண்ணுயிர் நீ !
கோபம் கொண்டு கொடூரமாய்
கொதித்தே எழுந்து விட்டாய்!
கொஞ்சி விளையாடும் பிஞ்சுகளையும்
கோடி கோடியாய் உழைக்கும் கோமகனையும்
கொட்டில்களிலே வாழும் சாதாரண குடிமகனையும்
நீ பிடித்துள்ள பிடி பலமானதே!
பாடங்கற்றுக் கொள்ள கொரோனா ஒரு படிப்பினையாம்
படிப்பறிவுள்ள மாந்தனே !
இனியாவது சிந்திக்க இது ஒரு வாய்ப்பு
மமதை பிடித்த மாந்தனே !
மனிதப் புனிதனாய் இனியாவது
இம்மண்ணில் வாழு
ஒரு ஜீவனாவது மிஞ்சுமா?
மனிதா! சிந்தித்து வாழ முனைந்திடு!
என்.யூ நூருள் ஐன்
ஓய்வுபெற்று ஆசிரியை
தல்கஸ்பிடிய,அரனாயக
[cov2019]
ஓடி உழைத்தாய் ஆடித்திரிந்தாய் ஆணவங் கொண்டாய் அகிலத்தையே வெல்லப் பார்த்தாய் அறநெறிகளை மறந்து, அசிங்கமான வாழ்க்கைக்கு இசைந்தாய் சதித்திட்டங்களை தீட்டி, சட்டங்களையே மறந்து விட்டாய் சமயத்தை தூரமாக்கி , சாத்தானை நண்பனாக்கி சாந்தியையே விரட்டியடித்தாய்…
ஓடி உழைத்தாய் ஆடித்திரிந்தாய் ஆணவங் கொண்டாய் அகிலத்தையே வெல்லப் பார்த்தாய் அறநெறிகளை மறந்து, அசிங்கமான வாழ்க்கைக்கு இசைந்தாய் சதித்திட்டங்களை தீட்டி, சட்டங்களையே மறந்து விட்டாய் சமயத்தை தூரமாக்கி , சாத்தானை நண்பனாக்கி சாந்தியையே விரட்டியடித்தாய்…