சருகான சட்டங்கள்
- by admin
- 21
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
பிணந்திண்ணிக் கழுகுகளின்
கைகளிலே அகப்பட்ட
சோசலிச சட்டங்கள்
சாய் மரமாய் இன்று
சரிந்தது சருகுகளாய்
சட்டம் தான் சரிந்ததென்று
சிந்திய கண்ணீர் இன்று
பிஞ்சவன் கருகியது கண்டு
இரத்தமாய் மாறியது
சீரழிந்த சட்டங்கள்
சீர்தூக்க யாருமில்லை
முடங்கிப் போன மூடர் மனதை
முறியடிக்க ஆளுமில்லை
ஜனநாயக பெயரை வைத்து
நடக்குதிங்கே நாட்டியங்கள்
சட்டங்கள் சாவடித்து
சரசமாய் புரியுதிங்கே
மனித குரல் உயரும் முன்னே
மக்களாட்சி வீழ்ந்ததின்றே
மனித நேயம் துளிர்க்கு முன்னே
மனித குணம் மறித்தின்றே
நீளுமா இக் காலம் – இல்லை
நிலைக்கும் ஓர் நியாயம்?
ஜனநாயகம் எனும் நாடகத்தில்
சிறைக் கைதிகளாய் நாம் இன்று
Shima Harees
Puttalam Karambe
பிணந்திண்ணிக் கழுகுகளின் கைகளிலே அகப்பட்ட சோசலிச சட்டங்கள் சாய் மரமாய் இன்று சரிந்தது சருகுகளாய் சட்டம் தான் சரிந்ததென்று சிந்திய கண்ணீர் இன்று பிஞ்சவன் கருகியது கண்டு இரத்தமாய் மாறியது சீரழிந்த சட்டங்கள் சீர்தூக்க…
பிணந்திண்ணிக் கழுகுகளின் கைகளிலே அகப்பட்ட சோசலிச சட்டங்கள் சாய் மரமாய் இன்று சரிந்தது சருகுகளாய் சட்டம் தான் சரிந்ததென்று சிந்திய கண்ணீர் இன்று பிஞ்சவன் கருகியது கண்டு இரத்தமாய் மாறியது சீரழிந்த சட்டங்கள் சீர்தூக்க…