சிற்பியின் சரிதை
- by admin
- 14
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
நிறங்களற்ற இரவுகளில்
வலிகளைப் பருகும்
விழிகளின் வழியே
வழியும் புன்னகையை புசித்திடுவார்
யாரும் உணர்ந்ததில்லை
அவள் உளவறையை
மணவறை ஏறாச் சிட்டு
மயானக்காட்டில் கற்பனைகள்
உயிர் உதிர்த்த வலி பூசி
புன்னகைக்கையில் அதன் ஆழ்மனது
சிதறல்கள் காற்றிடையாகி
கருகுவதை உணர்ந்தாரில்லை
நேசம் வராக் கல்வியில்
சாதனை திரட்ட கல்க்கியாகி
கண்ணீரோடு வெளியான
கண்ணதாசனின் வறுமையாகி
பேனா எடுத்து வரி தள்ளி
பிரபஞ்சம் பிய்த்தெறிந்த
வைரமுத்துவின் வரியாகி
தன்னை தடம் போடும் போதெல்லாம்
வந்த நபி வழியில் தன்னை
சுதாகரிக்கும் அவள் இருட்டறை
வெளிச்சம் தெரிந்தாரில்லை
உருகிடும் போது உணர்வதில்லை
யாருக்காகவோ என்று
எண்ணி விட்டால் மெழுகும் தாங்காது
தாங்கி நிற்பதெல்லாம்
ஏற்றுக் கொண்ட விதியின் சுவை
புன்னகை தரும் வாழ்வில்
கண்ணீரை ரசிக்கும் வரம்
காலத்தின் அனுபவ வேர்களால்
கட்டிப் போட்டிருக்கும் அவளை
காணக் கிடைத்தாரில்லை
அன்பில் உண்மை
நேசத்தில் நிதானம்
நம்பிக்கையில் நேர்மை
ஏமாற்றத்தில் விழிப்பு
துரோகத்தில் துணிவு
அத்தனையும் திணிக்கப்பட்ட
அவளில் தங்கி வாழ்வதெல்லாம்
யுகத் தவம் ….
புரியாத விழிகள் அரும்பும்
அவள் இருப்பின் ஆழம் அறிந்தாரில்லை யாரும்
நிமிர்ந்து நிற்க காணாத வழிகள் எல்லாம்
உயர்ந்து கொடுக்கும்
சிற்றெறும்பின் கால்கள் உடைக்க
நீளும் கரங்களை தட்டி எறியும் அது
யாரோடும் இனி நிராயுதபாணியாய்
போரிடப் போவதில்லை
தூரத்தில் கொஞ்சப் பேர்
பக்கத்தில் பல பேர்
விட்டு அகன்றவரெல்லாம்
சிற்றெறும்பு அவளென்று
கணக்கெடுத்து நின்றவரெல்லாம்
நின்ற இடம்தனில் அவள்
சிலையாகி சிதைந்திருப்பாள்
என்றெண்ணி முடிப்பதற்குள்
சிற்பியாகி நின்றாள்
ஏரூர் நிலாத் தோழி
நிறங்களற்ற இரவுகளில் வலிகளைப் பருகும் விழிகளின் வழியே வழியும் புன்னகையை புசித்திடுவார் யாரும் உணர்ந்ததில்லை அவள் உளவறையை மணவறை ஏறாச் சிட்டு மயானக்காட்டில் கற்பனைகள் உயிர் உதிர்த்த வலி பூசி புன்னகைக்கையில் அதன் ஆழ்மனது…
நிறங்களற்ற இரவுகளில் வலிகளைப் பருகும் விழிகளின் வழியே வழியும் புன்னகையை புசித்திடுவார் யாரும் உணர்ந்ததில்லை அவள் உளவறையை மணவறை ஏறாச் சிட்டு மயானக்காட்டில் கற்பனைகள் உயிர் உதிர்த்த வலி பூசி புன்னகைக்கையில் அதன் ஆழ்மனது…