Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
செம குட் நியூஸ்..!! நடுத்தர வர்த்தகத்தினருக்கு புதிய வீடு..!! மத்திய அரசு இந்த திட்டம் பற்றி தெரியுமா..? 

செம குட் நியூஸ்..!! நடுத்தர வர்த்தகத்தினருக்கு புதிய வீடு..!! மத்திய அரசு இந்த திட்டம் பற்றி தெரியுமா..?

  • 3

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

[[{“value”:”

இந்தியாவில் பலருக்கு சொந்த வீடு என்பது பெரும் கனவாக இருந்து வருகிறது. பலர் வாடகைச் சுமையைத் தாங்க முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு வீடு கட்ட அரசு நிதியுதவி செய்து வருகிறது. இதற்காக ஒரு சிறப்பு திட்டம் வழங்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்த வரம்பு அதிகரிக்கப்பட்டால், கடைக்காரர்கள், வியாபாரிகள் மற்றும் சுயதொழில் செய்பவர்களும் இத்திட்டத்தின் மூலம் வீடு வாங்க நிதியுதவி பெறலாம்.

இந்த மாற்றங்கள் மத்திய அரசின் ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் ஒரு பகுதியாகும். வீட்டின் விலை மற்றும் அளவு அடிப்படையில் வீட்டுக் கடன் சலுகைகள் வழங்குவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. நாட்டில் உள்ள அனைவருக்கும் சொந்த வீடு கட்ட உதவும் வகையில் 2015இல் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் வீட்டுக் கடனில் சலுகைகளைப் பெறலாம். இந்த உதவி ‘கிரெடிட் லிங்க்டு மானியத் திட்டம் (சிஎல்எஸ்எஸ்)’ மூலம் வழங்கப்படுகிறது.

PMAY வழிகாட்டுதல்களின்படி, பயனாளிகள் 3 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவு (EWS), குறைந்த வருமானம் கொண்ட குழு (LIG), நடுத்தர வருமானம் குழு (MIG) ஆகியவை அடங்கும். இத்திட்டத்தின் ஆரம்ப இலக்கு மார்ச் 2022ஆம் ஆண்டுக்குள் ‘அனைவருக்கும் வீடு’ வழங்குவதாகும். ஆனால், இந்த காலக்கெடு டிசம்பர் 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2024 மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் PMAY திட்டத்திற்கான ஒதுக்கீட்டை 66% அதிகரித்து ரூ.79,000 கோடியாக அறிவித்தார்.

கொரோனா காரணமாக சில சவால்கள் இருந்தாலும் பிரதமர் ஆவாஸ் யோஜனா (கிராமப்புறம்) தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘மூன்று கோடி வீடுகள் என்ற இலக்கை எட்டியுள்ளோம். குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களின் தேவைக்காக அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் இரண்டு கோடி வீடுகளை கட்ட முடிவு செய்துள்ளோம்’ என்று விளக்கினார். பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தை இரண்டு பகுதிகளாக பிரித்துள்ளனர். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா அர்பன் அவற்றில் ஒன்று. இத்திட்டம் நகர்ப்புறங்களில் வாழும் பல்வேறு சமூகங்களின் மீது கவனம் செலுத்துகிறது. இந்த திட்டம் நாடு முழுவதும் 4,000-க்கும் மேற்பட்ட நகரங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள், நகர்ப்புறங்களில் இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் திட்டம் மற்றொன்று. நாட்டின் கிராமப்புறங்களில் வசிக்கும் அனைத்து குடிமக்களுக்கும் வீடுகளை வழங்குவதே மத்திய அரசின் நோக்கமாகும். இத்திட்டம் செலவு-பகிர்வு மாதிரியை அடிப்படையாகக் கொண்டது. அதாவது பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான செலவை மத்திய அரசும் அந்தந்த மாநில அரசுகளும் கூட்டாக ஏற்கின்றன. செலவுப் பகிர்வு விகிதத்தைப் பார்த்தால், சமவெளிப் பகுதிகளில் மத்திய அரசு 60% செலவையும், மாநில அரசு 40% செலவையும் ஏற்கிறது. வடகிழக்கு, மலைப்பாங்கான பகுதிகளில் மத்திய அரசு 90% செலவையும், மாநில அரசு 10% செலவையும் ஏற்கிறது.

Read More : மத்திய ஆயுதப்படையில் கொட்டிக்கிடக்கும் காலியிடங்கள்..!! பெண்களும் விண்ணப்பிக்கலாம்..!! சூப்பர் வாய்ப்பு..!!

The post செம குட் நியூஸ்..!! நடுத்தர வர்த்தகத்தினருக்கு புதிய வீடு..!! மத்திய அரசு இந்த திட்டம் பற்றி தெரியுமா..? appeared first on 1NEWSNATION – Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

“}]]Read More 

​ 

[[{“value”:” இந்தியாவில் பலருக்கு சொந்த வீடு என்பது பெரும் கனவாக இருந்து வருகிறது. பலர் வாடகைச் சுமையைத் தாங்க முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு வீடு கட்ட அரசு நிதியுதவி செய்து வருகிறது.…

[[{“value”:” இந்தியாவில் பலருக்கு சொந்த வீடு என்பது பெரும் கனவாக இருந்து வருகிறது. பலர் வாடகைச் சுமையைத் தாங்க முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு வீடு கட்ட அரசு நிதியுதவி செய்து வருகிறது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *