சொன்னதில்லை
- by admin
- 19
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
தன்னை நாட வேண்டாம்
என கரை சொன்னதில்லை
அலையிடம்.
தன்னை தொட வேண்டாம்
என கடல் சொன்னதில்லை
வானத்திடம்.
தன்னை மறைக்க வேண்டாம்
என நிலா சொன்னதில்லை
மேகத்திடம்
தேனை உறிஞ்ச வேண்டாம்
என மலர் சொன்னதில்லை
வண்டிடம்.
தன்னை பிளந்து
வெளி வர வேண்டாம்
என மண் சொன்னதில்லை
விதையிடம்.
உதிர்ந்து விட வேண்டாம்
என மரம் சொன்னதில்லை
பூவிடம்.
தன்னில் விழ வேண்டாம்
என பூமி சாென்னதில்லை
மழைத்துளியிடம்.
சொன்னதில்லை
ஆனால் சொல்கின்றன
அழகான ஆயிரம்
அர்த்தங்களை
அப்பொழுதுகளை
இரசிக்கும் உள்ளத்திடம்!
Rushdha Faris
South Eastern University of Sri Lanka.
தன்னை நாட வேண்டாம் என கரை சொன்னதில்லை அலையிடம். தன்னை தொட வேண்டாம் என கடல் சொன்னதில்லை வானத்திடம். தன்னை மறைக்க வேண்டாம் என நிலா சொன்னதில்லை மேகத்திடம் தேனை உறிஞ்ச வேண்டாம் என…
தன்னை நாட வேண்டாம் என கரை சொன்னதில்லை அலையிடம். தன்னை தொட வேண்டாம் என கடல் சொன்னதில்லை வானத்திடம். தன்னை மறைக்க வேண்டாம் என நிலா சொன்னதில்லை மேகத்திடம் தேனை உறிஞ்ச வேண்டாம் என…