Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் அத்தலைமை பெறுப்பை சரிவர செய்யத் தவறுபவர்களுக்கும் இஸ்லாம் கூறும் நன்மையும்/தண்டனைகளும்! 

தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் அத்தலைமை பெறுப்பை சரிவர செய்யத் தவறுபவர்களுக்கும் இஸ்லாம் கூறும் நன்மையும்/தண்டனைகளும்!

  • 31

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

என்னால் முடிந்த வரை ஆராய்ந்து தந்துள்ளேன்……

حدثنا مسدد حدثنا يحيى عن عبيد الله قال حدثني خبيب بن عبد الرحمن عن حفص بن عاصم عن أبي هريرة رضي الله عنه : عن النبي صلى الله عليه و سلم قال ( سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله إمام عدل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ) صحيح البخاري

‘அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலும் இல்லாத கியாமத் நாளில் அல்லாஹ் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் வழங்குவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அவர்கள்:

  1. நீதமிகு தலைவர்
  2. அல்லாஹ்தஆலாவை வணங்குவதில் வளர்ந்த ஒரு வாலிபர்.
  3. மஸ்ஜித்களுடன் இதய பூர்வத் தொடர்பு கொண்ட மனிதர்.
  4. அல்லாஹ்வுக்காக நேசித்து, அவனுக்காகப் பிரியும் இரு மனிதர்கள்.
  5. அழகும், கவர்ச்சியுமிக்க பெண் (விபச்சாரத்திற்காக) அழைக்கும் போது, நான் அல்லாஹ்வை அஞ்சுகின்றேன் என்றுரைக்கும் மனிதன்.
  6. தனது வலக்கரம் தர்மம் செய்வதை, இடக்கரம் அறியாதளவு இரகசியமாக செலவு செய்யும் மனிதன்.
  7. தனிமையில் தியானத்தில் ஈடுபடும்போது, அல்லாஹ்வின் அச்சத்தால் அழும் மனிதன்.’

அறிவிப்பவர்: அபூஹுரைறா (ரலி) நூல்: புகாரி 6806

மறுமை நாளில், மஹ்ஷர் மைதானத்தில் அனைவரும் ஒன்று திரட்டப்பட்டு, சூரியன் மிக அண்மையில் கொண்டு வரப்படும் போது, அல்லாஹ் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் வழங்குவான். இஸ்லாம் நீதிமிகு தலைமையையே வேண்டி நிற்கிறது. பொறுப்புக்களையும், பதவிகளையும் அது அமானிதமாகவே கருதுகின்றது.

பக்கச் சார்பற்று தீர்ப்புக் கூறப் பணிக்கிறது. நீதிமிக்க தலைமையின் இலக்கணமாக நபி (ஸல்) அவர்கள் திகழ்கிறார்கள். அண்ணலாரின் நீதிமிகு தலைமை போன்றதோர் தலைமையை உலகம் இனிமேல் அதன் இறுதி மூச்சுவரை சந்திக்கவே முடியாது. அந்தளவு நபியவர்கள் இனம், நிறம், மதம் போன்ற அனைத்தையும் கடந்து நீதியாகவும் நேர்மையாகவும்; நடந்து கொண்டுள்ளார்கள்.

இந்த உலகத்தில் அளப்பெரிய செல்வாக்குடன் மாபெரும் தாக்கத்தை உண்டு பண்ணியவர்களின் நெடிய பெயர்ப்பட்டியலில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முதன்மையானவர்கள். ஏனெனில் ஆன்மீக, அரசியல், சமூக, பொருளியல், அறிவியல் போன்ற துறைகளில் மகத்தான வெற்றிபெற்றவர், உலக வரலாற்றில் அவர் ஒருவர் மட்டுமே, அவர்களின் தலைமைத்துவ ஆளுமை ஈட்டிய ஈடிணையற்ற செல்வாக்குதான்,

பொறுப்புக்களைப் பெற்றுவிட்டு மோசடி செய்தால், சுவர்க்கம் அவருக்கு ஹராமாகிவிடும்.

‘எந்த மனிதருக்கேனும் சிலரை நிருவகிக்கும் பொறுப்பை இறைவன் வழங்கி, அவன் அவர்களுக்கு மோசடி செய்தவனாக மரணித்துவிட்டால், சுவனத்தை அவனுக்கு இறைவன் ஹராமாக்கி விடுவான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகரி – முஸ்லிம்)

தலைமைப் பண்பைப் பயன்படுத்தி, மக்களுக்குத் தொல்லைகூட கொடுக்கக்கூடாது. நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றி, மிகவும் இரக்கமாகவும் பணிவுடனும் நடந்துகொள்ள வேண்டுமே தவிர, கடின சித்தத்துடன் ஆணவமாக நடக்கக் கூடாது. இதுபற்றி திருமறை வசனமொன்று பின்வருமாறு பேசுகிறது.

‘நீர் கடுகடுப்பானவராக – கடின சித்தமுடையவராக இருப்பீரானால், உம்மை விட்டும் அவர்கள் பிரிந்து போயிருப்பார்கள்.’ (3: 159)

தலைமைப் பண்புக்கு கண்டிப்புடன் கூடிய மென்மைத் தன்மையும் அவசியமாகவுள்ளது. இஸ்லாம் இயம்பும் மென்மைத் தன்மையோடு, நடுநிலை தவறாத நீதிமிக்க தலைவர்களுக்கே அல்லாஹ் தனது நிழலை வழங்குவான்.

‘இறைவா! என் சமுதாயத்தில் ஏதேனும் ஒரு விடயத்துக்கு ஒருவன் பொறுப்பேற்றுக் கொண்டு, அவர்களுக்குச் சிரமம் தருபவனுக்கு நீயும் சிரமத்தைக்கொடு! என் சமுதாயத்தில் ஏதேனும் ஒரு விடயத்திற்குப் பொறுப்பேற்று, அவர்களிடம் இனிமையாக நடப்பவனிடம் நீயும் இனிமையாக நடப்பாயாக! என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)

சப்ரான் நஜீர்

என்னால் முடிந்த வரை ஆராய்ந்து தந்துள்ளேன்…… حدثنا مسدد حدثنا يحيى عن عبيد الله قال حدثني خبيب بن عبد الرحمن عن حفص بن عاصم عن أبي هريرة…

என்னால் முடிந்த வரை ஆராய்ந்து தந்துள்ளேன்…… حدثنا مسدد حدثنا يحيى عن عبيد الله قال حدثني خبيب بن عبد الرحمن عن حفص بن عاصم عن أبي هريرة…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *