தாய்மை
- by admin
- 45
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
சத்தங்கள் இல்லா
மௌனங்களின் இடையில்
உதிரங்களின் நனைச்சல்கள்
உருவம் பெற
பல இரைச்சல்கள்
ரோமங்களின் உரசல்கள்
உனக்கு சுகமாகிட
தாயிற்கு வலியாகிட
இருள் படலம் சூழ்ந்த
கருபடலம் தந்த
இன்னறை என
உன்னை தரித்த
கருவரையில்
உன்னை சுமந்தவள்
பெண்மை பாராட்டும்
கற்பை கலைத்தவள்
உன்னை பெற்றிடவே
தன்னை தொலைத்தவள்
கண்ணீர் சிந்தி
உன்னை அனைத்தவள்
பிறர் கண் பட்டிட கூடாது என
காயங்கள் பல தாண்டி
உன்னை வளர்ந்தவள்
நீ கொட்டிய வார்த்தைகளை
சற்றும் நினைவில் கொள்ளாதது
மரணத்தின் மடியிலும்
உன்னை சுமந்திட துடிப்பவள்
சாதம் ஊட்டினாலும் உன்னை
சாதனையாளனாக்கியவள்
சுயநல பூமி தன்னில்
உன்னை சுதந்திர
தனி மனிதனென
தலைநிமிரச் செய்தவள்
நித்தம் உன்னை எண்ணி
நிதம் துடிப்பவள்
சொற்பம்
கண்ணீர் சிந்திட்டாலும்
பிள்ளையென நீ
வாழ்வதில் அர்த்தம் ஏதடா?
மனம் படைத்திட்ட
தேனடா மானிடா?
அ. சுதர்சினி
Gonakelle Division
Kandapola
Nuwaraeliya
சத்தங்கள் இல்லா மௌனங்களின் இடையில் உதிரங்களின் நனைச்சல்கள் உருவம் பெற பல இரைச்சல்கள் ரோமங்களின் உரசல்கள் உனக்கு சுகமாகிட தாயிற்கு வலியாகிட இருள் படலம் சூழ்ந்த கருபடலம் தந்த இன்னறை என உன்னை தரித்த…
சத்தங்கள் இல்லா மௌனங்களின் இடையில் உதிரங்களின் நனைச்சல்கள் உருவம் பெற பல இரைச்சல்கள் ரோமங்களின் உரசல்கள் உனக்கு சுகமாகிட தாயிற்கு வலியாகிட இருள் படலம் சூழ்ந்த கருபடலம் தந்த இன்னறை என உன்னை தரித்த…