தேடல்
- by admin
- 17
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
மனிதநேயம் தேடியொரு
நெடுந்தொலைவுப் பயணம்.
மயங்கி வீழ்வேனோ
என்றெண்ணும் தருணம்.
வன்முறை வளைக்குள்
அன்பு நெறி
சுருக்கிக் கொண்ட
மனிதர்கள்.
கரம் கொடு எனும்
பலவீனப் பார்வைக்கிங்கே
இல்லை அங்கீகாரம்
உதவி எனும் எண்ணத்தில்
ஏதிங்கே உபகாரம்.
கனிவொழுகப் பார்க்கும்
பார்வை கலைந்து போன
தேசம் இது
தனித் தனி தீவென்றே
புதைந்து போன தேசம்
காட்டுக்குள் காணுகின்ற
காருண்யம்
வீட்டுக்குள் காணவில்லை
மனிதநேயம்.
கழுத்தறுத்து குழி பறித்து
வீழ்த்திடவே மனிதர் இன்று
தோள்கொடுத்து
கரம் கொடுக்கும்
மனிதர் காண்பது என்று.
மக்கொனையூராள்
மனிதநேயம் தேடியொரு நெடுந்தொலைவுப் பயணம். மயங்கி வீழ்வேனோ என்றெண்ணும் தருணம். வன்முறை வளைக்குள் அன்பு நெறி சுருக்கிக் கொண்ட மனிதர்கள். கரம் கொடு எனும் பலவீனப் பார்வைக்கிங்கே இல்லை அங்கீகாரம் உதவி எனும் எண்ணத்தில்…
மனிதநேயம் தேடியொரு நெடுந்தொலைவுப் பயணம். மயங்கி வீழ்வேனோ என்றெண்ணும் தருணம். வன்முறை வளைக்குள் அன்பு நெறி சுருக்கிக் கொண்ட மனிதர்கள். கரம் கொடு எனும் பலவீனப் பார்வைக்கிங்கே இல்லை அங்கீகாரம் உதவி எனும் எண்ணத்தில்…