நான் பொங்கி எழுந்தால்

  • 12

தென்றலாய் இருக்கும் என்னை
உன் வஞ்சகக் காற்று கொண்டு
புயலாய் வீச விடாதே

தூரலாய் இருக்கும் என்னை
உன் கோரப் புத்தி கொண்டு
வெள்ளமாய் மாற்றி விடாதே

அலையாய் இருக்கும் என்னை
உன் ஆக்ரோஷ வார்த்தை கொண்டு
பேரலையாய் ஆக்கி விடாதே

மௌனம் காக்கும் என்னை
உன் ஊசி சொற்கள் கொண்டு
பேரிடியாய் பேச விடாதே

மின்மினியாய் இருக்கும் என்னை
உன் விஷமப் பார்வை கொண்டு
மின்னலாய் மின்ன விடாதே

பொறுமை கொள்ளும் என்னை
உன் போலி சிரிப்பு கொண்டு
பொங்கி எழும்ப விடாதே

நான் அமைதி காப்பெதெல்லாம்
உனக்கு அடிமை என்று இல்லை.
நான் ஆக்ரோஷமானால்
நீ தாங்க மாட்டாய் என்பதனாலே.
பொறுமை ஆகிவிடு
இல்லையேல் பொசிங்கிடுவாய்!

Shima Harees
Puttalam

தென்றலாய் இருக்கும் என்னை உன் வஞ்சகக் காற்று கொண்டு புயலாய் வீச விடாதே தூரலாய் இருக்கும் என்னை உன் கோரப் புத்தி கொண்டு வெள்ளமாய் மாற்றி விடாதே அலையாய் இருக்கும் என்னை உன் ஆக்ரோஷ…

தென்றலாய் இருக்கும் என்னை உன் வஞ்சகக் காற்று கொண்டு புயலாய் வீச விடாதே தூரலாய் இருக்கும் என்னை உன் கோரப் புத்தி கொண்டு வெள்ளமாய் மாற்றி விடாதே அலையாய் இருக்கும் என்னை உன் ஆக்ரோஷ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *