நாளை வரும் நாள்
- by admin
- 21
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
அச்சம் தீர்க்கும் ஓர் நாள்
மடமை உடைத்தெறியும் அந்நாள்
வரும் என் ஏக்கம் தனிக்க
பொல்லாதவர் நிலை பேதலிக்க
நல்லவர் வழி அமல் கணத்து நிற்க
நியாயங்கள் இழந்து நின்ற இடங்களிலெல்லாம்
நீதி நிலைக்க வரும்
எனக்கான அந்த நாள்
விதியென்போர் அதை
மதியேற்பதில்லை
உயிர் பிரிந்தால் உண்டு
உலகொன்று மறைவாய்
செயல் நிறுக்க வரும்
நாளதில் நம்பிக்கை இல்லை
உருகும் இரும்பு விழுந்து துடிக்கும் வேதனைக்கப்பால்
உலக நெருப்பை விழுங்கிக் கொள்ளும்
அக்கினிச் சுவாலையில் அவித்தெடுக்கும் நாளொன்று வரும்
மலர்ந்து மணம் பரப்பும் பொய்களை
நீச்சலிட்டுப் பாயும் கொடூரங்களை
நிமிர்ந்து மளியும் அநீதிகளை
பொசுக்கி எறியும்
கொள்கை கொண்ட நாள்
நீதி உள்ளவரை
தலை காக்கும்
கவச நாள்
பாவங்கள் நிறைந்த மண்ணில்
பாவிகள் சுதந்திரம் காண
அப்பாவி மக்கள் அடிமையாகி
சுருளும் அவலம் நீங்க
அநீதிக்கு துணையான
அத்தனையோரும் வியக்க
விஞ்ஞானம் மறுக்கா
அஞ்ஞானம் கொண்ட
அவன் வாக்கு நிலைக்கும் நாள் வரும்
தரையில் நெற்றி பதித்து
சிறம்பணிய அலட்சித்தவரும்
சேமித்த செல்வங்கள் சேர்ந்தொழுக சதையோடு கொடுத்துதவ ஸக்காத்தை மறுத்தவரும்
மாதமெல்லாம் நோன்பிருந்து
பலனின்றி யதை பறக்க விட்டவரும்
தீனை ஏற்று அதன் தூண்களைத் துண்டித்தவரும்
வியர்வையில் மூழ்க வெப்பத் தனலாய் வரும் அந்நாள்
நியாயம் நிலைக்கும்
உண்மை உயரும்
பாவிகள் பதறும்
நீதியின் பிறப்பிடம் காண ஏக்கம் தீர்க்க வரும்
அவன் வாக்கு நிலைக்கும் நாள்
ஏரூர் நிலாத் தோழி
அச்சம் தீர்க்கும் ஓர் நாள் மடமை உடைத்தெறியும் அந்நாள் வரும் என் ஏக்கம் தனிக்க பொல்லாதவர் நிலை பேதலிக்க நல்லவர் வழி அமல் கணத்து நிற்க நியாயங்கள் இழந்து நின்ற இடங்களிலெல்லாம் நீதி நிலைக்க…
அச்சம் தீர்க்கும் ஓர் நாள் மடமை உடைத்தெறியும் அந்நாள் வரும் என் ஏக்கம் தனிக்க பொல்லாதவர் நிலை பேதலிக்க நல்லவர் வழி அமல் கணத்து நிற்க நியாயங்கள் இழந்து நின்ற இடங்களிலெல்லாம் நீதி நிலைக்க…