நிழற்படமானது என் வாழ்க்கை
- by admin
- 23
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
அந்திப் பொழுதின் சாயலில்
மலரும் அல்லிப் பூ நானடி
என்னை அரலி விதையென
அடியோடு வெட்டியதேனடி
தென்றலென வந்து உன் காதல்
என்னை தொடுமென நினைத்தேன்
தேனிலும் விசமுண்டு என்பதையே
உன் விழிகளின் மறுப்பில்தான் உணர்ந்தேன்
என் உமிழ்நீரும் உன்னருகில்
விசமென உருமாறியே
என்னுள் நெடுங்காலம்
உயிர் வாழ்கிறது
அன்பே உன்னைக் காணும்
நாளிகையில் மாத்திரம்தான்
என் மனம் மாளிகையில்
வாழ்வதாய் பேரானந்தத்துடன்
பெருமூச்சு விடுகிறது
கடிவாளமாய் உன் நினைவுகள்
என்னுள் உயிர் வாழ்வதால்
குடிபோதையில் நான் வரைந்த
நிழற்படமானது என் வாழ்க்கை!
கவியிதழ் காதலன்
ஐ.எம்.அஸ்கி
அட்டாளைச்சேனை-08
அந்திப் பொழுதின் சாயலில் மலரும் அல்லிப் பூ நானடி என்னை அரலி விதையென அடியோடு வெட்டியதேனடி தென்றலென வந்து உன் காதல் என்னை தொடுமென நினைத்தேன் தேனிலும் விசமுண்டு என்பதையே உன் விழிகளின் மறுப்பில்தான்…
அந்திப் பொழுதின் சாயலில் மலரும் அல்லிப் பூ நானடி என்னை அரலி விதையென அடியோடு வெட்டியதேனடி தென்றலென வந்து உன் காதல் என்னை தொடுமென நினைத்தேன் தேனிலும் விசமுண்டு என்பதையே உன் விழிகளின் மறுப்பில்தான்…