பெண் நிலை
- by admin
- 61
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
நீதி கேட்க தயங்குறேன்டி
நாலு பேர் முன்னால் தன் நிலை கூற நடுங்குதடி
இத்தனையும் விட தன் மானம் மீது
பாயும் கயவர்களை தட்டி கேட்டிட செத்து பிழைக்கிறேன்டி
காரணம் நான் ஒரு பெண்
பொட்ட புள்ள உனை வளர்க்க
உன் தாயின் அடி மடியில் கனமேறுதடி
ஆனாலும் துடிக்குதடி
நெஞ்சம் தடையற வாழ்ந்திட
வீட்டுக்குள்ள பூட்டி வச்சி
சுதந்திரம் தந்த ஆண்களே
கொஞ்சம் கண் தொறந்து
பாருமைய்யா இந்த பொட்டபுள்ள வாழ்கைய
மாதவிலக்கும் அவளை
வலியோடு விலக்கியே வைத்துவிட்டது
சுமை தாங்கி அவள் சுமக்கிறாள்
இன்னோருயிரை
துடிக்குறாள் அவள் பிரசவ வலியினாள்
அப்போதும்
அவள் உணர்வது வலி மட்டுந்தானடி
பெண் நிலை வகிப்பதும் துயரே
அந்நிலை வாழ்வதும் துயரே
றஹ்னா பின்த் மகுனதுர் ரஹ்மான்
மருதமுனை
நீதி கேட்க தயங்குறேன்டி நாலு பேர் முன்னால் தன் நிலை கூற நடுங்குதடி இத்தனையும் விட தன் மானம் மீது பாயும் கயவர்களை தட்டி கேட்டிட செத்து பிழைக்கிறேன்டி காரணம் நான் ஒரு பெண்…
நீதி கேட்க தயங்குறேன்டி நாலு பேர் முன்னால் தன் நிலை கூற நடுங்குதடி இத்தனையும் விட தன் மானம் மீது பாயும் கயவர்களை தட்டி கேட்டிட செத்து பிழைக்கிறேன்டி காரணம் நான் ஒரு பெண்…