பேருந்து பயணம்
- by admin
- 27
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
விடியற்காலை வேளை
விரைந்தோடும் நேரம்
தூரப்பயணம் அது
ஜன்னல் ஓரத்தில் நான்
குளிர்ந்த தென்றல் கீறி கிழித்து
மூக்கினை துளைத்து செல்கிறது
இருக்கையெல்லாம் நிறைந்திருக்க
என் இணையர்களும்
அருகருகே அமர்ந்திருக்க
துள்ளல் இசையோடு உருண்டோடுகிறது
பேருந்து பயணம்
செல்லும் வழியிலே
தண்டவாளம் ஒன்று தனியே
அழுது கொண்டிருக்கிறது
தாலாட்ட யாருமில்லையென்று
துணைக்கு நான் வரவா
மனம் கேட்க தோனியது
தேவை ஒன்றிருந்தால்தானே
தேடி வருவாய் என்று
உள்ளுக்குள் சினுங்கியது தண்டவாளம்
வெட்டி விட்ட நீரோடையில்
நீந்த மறந்த மீனாய்
துடி துடித்து போனது இதயம்
தேவைக்காய் பழகுபவன் நானில்லையென்று
துடைத்து விட்டு கண்ணீரை
நகர்ந்து செல்கிறேன்
தொலைதூர பயணம் அது
வலிகளின் விளிம்பில்
பிறந்ததால் என்னவோ
அன்பு என்ற அடைக்கலம்
தேடி நகர்ந்து கொண்டிருக்கிறேன்
அனுகவி றிப்கான்
அட்டாளைச்சேனை-06
விடியற்காலை வேளை விரைந்தோடும் நேரம் தூரப்பயணம் அது ஜன்னல் ஓரத்தில் நான் குளிர்ந்த தென்றல் கீறி கிழித்து மூக்கினை துளைத்து செல்கிறது இருக்கையெல்லாம் நிறைந்திருக்க என் இணையர்களும் அருகருகே அமர்ந்திருக்க துள்ளல் இசையோடு உருண்டோடுகிறது…
விடியற்காலை வேளை விரைந்தோடும் நேரம் தூரப்பயணம் அது ஜன்னல் ஓரத்தில் நான் குளிர்ந்த தென்றல் கீறி கிழித்து மூக்கினை துளைத்து செல்கிறது இருக்கையெல்லாம் நிறைந்திருக்க என் இணையர்களும் அருகருகே அமர்ந்திருக்க துள்ளல் இசையோடு உருண்டோடுகிறது…