பொய்த்திடாது பெய்துவிடு
- by admin
- 9
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
காரிகையின் கூந்தலெனத்
துவளும் கார்முகில்
மலைகளிடை பவனிவந்து
கருவுற்றுப் பிரசவிக்கும்
கார்கால மழையே
மஞ்சைகள் மகிழ்வினிலே
தோகை விரித்தாட
மஞ்சுவெனும் பஞ்சணையில்
தஞ்சம் கொண்டிருந்த
விந்தை மழையே
மேகவீதி வானவில்லால்
அலங்கரிக்க
குளிர் காற்றில்
கூச்சலிடும்
குறும்புக்கார மழையே
விண்ணை விரைவாய்
உலுப்பி உதிர்த்திட
மந்திரமாய் வந்திடும்
மாரிகால மழையே
நாமங்கள் பலசூடி
நம்பியுன்னை
அழைக்கின்றோம்
விண்ணுக்கும் மண்ணுக்கும்
நீதானே உறவுப்பாலம்
உன் வரவின்றேல்
பூமிக்கு வீணே
மலட்டுப் பெயர்
மண்வாசம் நாசியிலே
நடைபயில
நம் தேசம் தூசியிலே
தொலைந்திடாமல்
பருவத்தில் பொய்த்திடாது
பெருமனதாய்ப் பெய்துவிடு.
நிலாக்கவி நதீரா முபீன்
புளிச்சாக்குளம்
புத்தளம்.
காரிகையின் கூந்தலெனத் துவளும் கார்முகில் மலைகளிடை பவனிவந்து கருவுற்றுப் பிரசவிக்கும் கார்கால மழையே மஞ்சைகள் மகிழ்வினிலே தோகை விரித்தாட மஞ்சுவெனும் பஞ்சணையில் தஞ்சம் கொண்டிருந்த விந்தை மழையே மேகவீதி வானவில்லால் அலங்கரிக்க குளிர் காற்றில்…
காரிகையின் கூந்தலெனத் துவளும் கார்முகில் மலைகளிடை பவனிவந்து கருவுற்றுப் பிரசவிக்கும் கார்கால மழையே மஞ்சைகள் மகிழ்வினிலே தோகை விரித்தாட மஞ்சுவெனும் பஞ்சணையில் தஞ்சம் கொண்டிருந்த விந்தை மழையே மேகவீதி வானவில்லால் அலங்கரிக்க குளிர் காற்றில்…