Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
போதையை ஒழிப்போம் புதுயுகம் படைப்போம் 

போதையை ஒழிப்போம் புதுயுகம் படைப்போம்

  • 15

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

காத்திருந்த காலமெல்லாம்
வேர்த்திருந்த கால்கள் கூறும்
நேத்திருந்து நேரமில்லை
இடைவெளியின்றி துடித்திட இதயம்
இளைப்பார இடமிருந்தும்
களைப்பார காலமில்லை

ஓடாத கால்களோ
ஓட்டம் எடுத்தது
தேடாத கண்களோ
நோட்டம் கொடுத்தது
கேட்காத செவிகளோ இன்று
பல கேள்விக்கு பெயர் கொடுத்தது
மண்மூடும் என மனமறிந்தும்
கண்மூட துணிவிருந்தா
கள்வன் போல் களவாடுகிறாய்
உன் உயிரை நீயே

புத்தகப் பைக்குள்
பல பேர்களில் போதைப்பொருட்கள்
பாதைகளை மறைக்கும்
எத்தனையோ போத்தல்கள்
பார்த்துத்தானே கால் வைக்கிறோம்

வீரம் விளைந்த இம்மண்ணில்
குடி உதிரம் உறைக்கிறது
நம் கண்கள் அதை பார்த்தும்
தடுக்க நெஞ்சம் வேர்க்கிறது
போதைக்கு அடிமையாகி
வேளாண்மை செய்பவன் தொடக்கம்
வெளிநாடு செல்பவன் வரை
ஆண்மையை இழந்துதானே போகிறான்

தம்பி தப்பிச் செல்
அப்பா வருகிறார் என்கிறான்
அண்ணன் தடுக்கும் கைகளில்
போத்தல்களைத் தாங்கியவனாய்
இன்றைய உலகில் கேட்டுத்தானே இருக்கிறோம்

பாதை மறந்து படுத்துறங்கும் குடிகார புருசன்
பணப்பைக்குள் பத்திரமாய் இருக்கும் பாக்கு
களைப்பை போக்க கஞ்சாவாம்
எத்தனை பேரில் என்னவெல்லாம் வருகிறது
கேட்கும் போதே என் கைகள் கத்தி தேடுகிறது
புரட்சிக் கவிதையல்ல இது
புது யுகம் படைக்க முயற்சிக் கவிதை

உண்மையில் நீ ஆணாக இருந்தால்
அண்மையில் நடக்கும் போதையை அழி
ஆண்மையில் பிறக்கும்
பெண்மை கூட துணிவு பெறும்
தூரத்து குடிகாரர்களை துரத்தியடிக்க
போதையை ஒழிப்போம்
புதுயுகம் படைப்போம்!!

ஐ.எம்.அஸ்கி
கவியிதழ் காதலன்
அட்டாளைச்சேனை-08

காத்திருந்த காலமெல்லாம் வேர்த்திருந்த கால்கள் கூறும் நேத்திருந்து நேரமில்லை இடைவெளியின்றி துடித்திட இதயம் இளைப்பார இடமிருந்தும் களைப்பார காலமில்லை ஓடாத கால்களோ ஓட்டம் எடுத்தது தேடாத கண்களோ நோட்டம் கொடுத்தது கேட்காத செவிகளோ இன்று…

காத்திருந்த காலமெல்லாம் வேர்த்திருந்த கால்கள் கூறும் நேத்திருந்து நேரமில்லை இடைவெளியின்றி துடித்திட இதயம் இளைப்பார இடமிருந்தும் களைப்பார காலமில்லை ஓடாத கால்களோ ஓட்டம் எடுத்தது தேடாத கண்களோ நோட்டம் கொடுத்தது கேட்காத செவிகளோ இன்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *