மதுவுக்கு மாயாதீர்
- by admin
- 27
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
மாந்தருக்கு மனுவொன்று
மதுவென்று மாய்ந்தலையாதீர்
மானம் கெட்ட செயலொன்று
செய்ய துணியாதீர்
மனிதம் தொலைத்து
மனம் கெடாதீர்
ஆறுதலென்றாலும் வேண்டாம்
ஆடம்பரத்திலும் வேண்டாம்
அது தான் அழகென்றாலும் வேண்டாம்
அந்நியோரின் வழியொன்றும்
நமக்கு வேண்டாம் விலகிடு
போதையிலே ஆடுபவன்
ஆடவனும் அல்லi
பெரும் ஆணவத்திலாடுபவன்
போதையிலில்லாமலும் அல்ல
மது இழக்கச் செய்யும் அறிவீரோ
மதியின்றி மயங்கிடச் செய்யும்
மாந்தரை மாய்த்திடவே துணியும் அறிவீரோ
குடி கெடுமாம் குடியாலே
பெரும் குணமெல்லாம் குன்றிடுமாம்
பெரும் விளக்கமெல்லாம் கேட்கிறாய்
பெருமுள்ளம் கொண்டே விலகிடலாமல்லவா?
மதுவை விலக்கிடலாமல்லவா?
வாழ்விழக்கச்செய்யும்
வலுவிழக்கச்செய்யும்
வார்த்தைகளும் மீறிச்செல்லும்
அதன் வாசமென்றாலும் வேண்டாம்
வாழ வரும் சந்ததி
வழிகெட வேண்டாம்
வாழ வேண்டிய நீயும்
பெரும் சாபம் தனை
சுமந்தலையவும் வேண்டாம்
கெடுத்துக்கொள்ளாதே
பெரும் கேடுதனை நீயே
விலை கேட்டுக்கொள்ளாதே
உடலே கேடு பெறுமாம்
உளமே பெரும் பாடுபடுமாம்
மதுவுக்கு வேண்டாம் மறு ஜென்மம்
மாற்ற முடிந்திட்டால் அதுவே பெருந்தர்மம்
மாந்தரே உமக்கு மனுவொன்று
மதுவென்று மாய்ந்தலையாதீர்
மானம் கெட்ட செயலொன்று செய்ய துணியாதீர்
இஷாதா முஹம்மத்
ஏரூர்
மாந்தருக்கு மனுவொன்று மதுவென்று மாய்ந்தலையாதீர் மானம் கெட்ட செயலொன்று செய்ய துணியாதீர் மனிதம் தொலைத்து மனம் கெடாதீர் ஆறுதலென்றாலும் வேண்டாம் ஆடம்பரத்திலும் வேண்டாம் அது தான் அழகென்றாலும் வேண்டாம் அந்நியோரின் வழியொன்றும் நமக்கு வேண்டாம்…
மாந்தருக்கு மனுவொன்று மதுவென்று மாய்ந்தலையாதீர் மானம் கெட்ட செயலொன்று செய்ய துணியாதீர் மனிதம் தொலைத்து மனம் கெடாதீர் ஆறுதலென்றாலும் வேண்டாம் ஆடம்பரத்திலும் வேண்டாம் அது தான் அழகென்றாலும் வேண்டாம் அந்நியோரின் வழியொன்றும் நமக்கு வேண்டாம்…