மனசின் குளத்தினுள் ஒலிக்கும் மீன்களின் பாடல்
- by admin
- 10
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
மீன்களை அரவனைத்தபடி
ஆதியிலிருந்து வசித்து வந்தது குளம்
அதன் நீர்ச் சரடுளை சிறு உறுத்தலுமின்றி
அடாத்தாக துரத்தி விட்டு
இருப்பிடங்களை நிர்மாணித்து
குடியேறி வசிக்கலானோம்
இப்போது ஒதுங்குவதற்கு
சிறு குட்டையின்றி சாலை தோறேும்
கை விடப்பட்ட பூனைக்குட்டிகளென
அனாதரவாக அலைந்து திரிகி்ன்றன
ஓயாது பெய்யும் அடை மழையில்
வெளியேறிச் செல்ல வேறு வழியின்றி
சாலை தோறும் திட்டுத் திட்டாக
கிடக்கிறது நீர்க் தாரைகள்
அது விரைந்து செல்லும் வாகனங்களின்
சில்லுகளினிடை அரைபட்டுச் சிதறுகையில்
மீன்களின் கத்தலும் கதறலும்தான் கேட்கிறது
உடன் குளமொன்றை வரைந்து
போக்கிடமின்றி அலைவுறும் நீரினை
கையோடழைத்து வந்து
குளத்தினுள் மெதுவாக இறக்கி விடுகிறேன்
பூர்வீக நிலத்திற்கு மீளத் திரும்பிய குதுகலத்தில்
தனது பறவைகளை அழைத்துப் பேசி
ஆற்றுப் படுத்துவதனை
கண்ணுற்ற இரட்டிப்பு மகிழ்ச்சியில்
திரும்பி வருகிறேன்
என் மனசின் குளத்தினுள் ஓயாது கேட்கிறது
மீன்களின் இனிமையான பாடல்
ஜமீல்
வியூகம் வெளியீட்டு மையம்
மீன்களை அரவனைத்தபடி ஆதியிலிருந்து வசித்து வந்தது குளம் அதன் நீர்ச் சரடுளை சிறு உறுத்தலுமின்றி அடாத்தாக துரத்தி விட்டு இருப்பிடங்களை நிர்மாணித்து குடியேறி வசிக்கலானோம் இப்போது ஒதுங்குவதற்கு சிறு குட்டையின்றி சாலை தோறேும் கை…
மீன்களை அரவனைத்தபடி ஆதியிலிருந்து வசித்து வந்தது குளம் அதன் நீர்ச் சரடுளை சிறு உறுத்தலுமின்றி அடாத்தாக துரத்தி விட்டு இருப்பிடங்களை நிர்மாணித்து குடியேறி வசிக்கலானோம் இப்போது ஒதுங்குவதற்கு சிறு குட்டையின்றி சாலை தோறேும் கை…