மனிதம் உள்ள மனிதர்கள்….!!!
- by admin
- 8
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
ஒவ்வொரு வருடமும் கழிந்து செல்கின்ற போது எத்தனை விதமான அனுபவங்கள்….. புதிய உறவுகளின் வருகை, சில உறவுகளின் பிரிவு, துக்கம், மகிழ்ச்சி, வெற்றிகள், தோல்விகள், வாய்ப்புக்கள்…… என்று என்னென்ன மாற்றங்களை ஒவ்வொரு வருடமும் சந்திக்கின்றோம்?
ஒவ்வொரு விடியலிலும் அந்தியிலும் எத்தனை மாற்றங்கள்… எத்தனை வசீகரங்கள், எவ்வளவு கவலைகள்? எல்லா நிமிடங்களிலும் ஒரு குழந்தை பிறந்து கொண்டு இருக்கிறது; ஒரு மரணம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
கடந்த காலத்தைப் போன்று இந்த வருடம் இருப்பதில்லை; இந்த வருடத்தைப் போன்று அடுத்த வருடம் இருக்கப் போவதும் இல்லை. வருடங்கள், மாதங்கள், நாட்கள் எல்லாமே எப்போதும் அவையாகவே தான் இருக்கின்றன. ஆனால், அதில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் தான் அவர்களாக இருப்பதில்லை.
பகைமை, வெறுப்பு, குரோதம், சந்தேகம், வீண்பழி, இனப்பிரச்சினை… என எல்லாமே இந்த மனிதர்களிடத்தில் தாராளமாகவே குடிகொண்டு விட்டன. இவைதவிர கல்வி, தொழில், பதவி, வசதி, அழகு என எல்லாமே மாறிவிட்டன. இவை மட்டும்தான் இதிலிருந்து மாறுவதற்கு மனித மனங்கள் தான் தயாராக இல்லை.
‘மனிதன்’ என்ற ஒரே கொள்கையில் நிலைத்திருக்கும் காலம் வர வேண்டும். இன, மத, மொழி பேதம் கடந்து பகைமை, வெறுப்பு, குரோதம், சந்தேகம், வீண்பழி மறந்து வாழும் மனிதர்கள் வேண்டும்.
வெறும் மனிதர்களாக இல்லை; மனிதம் உள்ள மனிதர்கள் வேண்டும்.
சஸ்னா பானு நவாஸ்
திஹாரி
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்
ஒவ்வொரு வருடமும் கழிந்து செல்கின்ற போது எத்தனை விதமான அனுபவங்கள்….. புதிய உறவுகளின் வருகை, சில உறவுகளின் பிரிவு, துக்கம், மகிழ்ச்சி, வெற்றிகள், தோல்விகள், வாய்ப்புக்கள்…… என்று என்னென்ன மாற்றங்களை ஒவ்வொரு வருடமும் சந்திக்கின்றோம்?…
ஒவ்வொரு வருடமும் கழிந்து செல்கின்ற போது எத்தனை விதமான அனுபவங்கள்….. புதிய உறவுகளின் வருகை, சில உறவுகளின் பிரிவு, துக்கம், மகிழ்ச்சி, வெற்றிகள், தோல்விகள், வாய்ப்புக்கள்…… என்று என்னென்ன மாற்றங்களை ஒவ்வொரு வருடமும் சந்திக்கின்றோம்?…