மீண்டும் ஒரு வாழ்த்து மடல்!
- by admin
- 10
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
என்ன தான் இரவு நிலவு
பிரகாசமாக இருந்தாலும்
அது விண்மீன் கூட்டத்துக்கு
மத்தியில் இருந்தால் தான்
இன்னும் அழகாக ஜொலி ஜொலிக்கும்
அது போல் எத்தனை
எழுத்தாளர்கள் இருப்பினும்
அவர்களது எழுத்துக்களுக்கு
வாசகர் வட்டம் இருந்தாலே
அந்த எழுத்துக்களும் உயிர் பெறும்
அவர்கள் வாசகர் மட்டும் அல்ல
என்னை சிலையென செதுக்கும்
எழுத்துலகின் சிற்பிகள்
அவர்களின் சிற்பம் நானாவேன்!
எண்ணங்களுக்கான எழுத்தை தருகிறேன்
என் பேனா முனையின் மை தீரும் வரை
அதற்கான ஆதரவை தாருங்கள்
அதன் பக்கங்கள் முடியும் வரை
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும்
ஒத்துழைப்புக்கும் – என்
உள்ளம் கனிந்த நன்றிகள்!
வாழ்த்துக்கள் வாசகர் நெஞ்சமே!
என்றும் உங்கள் கலையுலகில்
கவி பாடும் இளம் கவிக்குரல்!
இவள் கவிகளால்
கனவை வெல்லும் கவித்தோழி!
Noor Shahidha
SEUSL.
Badula.
என்ன தான் இரவு நிலவு பிரகாசமாக இருந்தாலும் அது விண்மீன் கூட்டத்துக்கு மத்தியில் இருந்தால் தான் இன்னும் அழகாக ஜொலி ஜொலிக்கும் அது போல் எத்தனை எழுத்தாளர்கள் இருப்பினும் அவர்களது எழுத்துக்களுக்கு வாசகர் வட்டம்…
என்ன தான் இரவு நிலவு பிரகாசமாக இருந்தாலும் அது விண்மீன் கூட்டத்துக்கு மத்தியில் இருந்தால் தான் இன்னும் அழகாக ஜொலி ஜொலிக்கும் அது போல் எத்தனை எழுத்தாளர்கள் இருப்பினும் அவர்களது எழுத்துக்களுக்கு வாசகர் வட்டம்…