Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
முகத்திறை எமது கவசம் அதை களைய வைத்து ஓழுக்கத்தை சிதைக்க முயற்சிக்காதீர்கள் 

முகத்திறை எமது கவசம் அதை களைய வைத்து ஓழுக்கத்தை சிதைக்க முயற்சிக்காதீர்கள்

  • 4

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

சுவனத்துக் கண்ணழகிகளை எந்தக் கண்ணுமே கண்டிராத பெண்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். அது அவர்களுக்கு வழங்கப்பட்ட தனிச் சிறப்பு. இவ்வுலகத்துப் பெண்கள் அவர்களின் அழகையோ சிறப்பையோ குணத்தையோ எட்டிவிட முடியாது. ஆனாலும் சுவனத்துப் பெண்களைப் போன்று தன் கணவன் மட்டுமே என்னைப் பார்க்க வேண்டும். வேறு அண்ணிய ஆண்கள் தன்னைப் பார்த்து விடக்கூடாது என்று அந்த சுவனத்துக் கண்ணழகிகளைப் போன்று வாழ நினைப்பபதில் தவறேதுமில்லை.

அன்னிய ஆண்கள் தன்னைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காகவே தன்னுடைய இயல்பையே மாற்றிக் கொள்ளக்கூடிய இந்தக் காலத்து பெண்களுக்கு மத்தியில் தன்னை யாருமே பார்த்து விடக்கூடாது என தன்னை மறைத்துக்கொள்ள விரும்பும் பெண்கள் அல்லாஹ்வின் அருள் பெற்றவர்களே.

விதம் விதமாக தன்னை அலங்கரித்து எல்லா அங்கங்களின் அளவும் தெளிவாகத் தெரியும் அளவுக்கு இருக்கமான ஆடையணிந்து நபிகளார் நரகவாதி எனவும் சுவனத்தின் வாடையைக்கூட நுகர முடியாது என்றும் கூறிய பெண்கள் போலல்லாமல் எத்துனை எதிர்ப்புகள் அவமானம் தடைகள் வந்தாலும் கற்பைப்பேனி வாழப் போராட்டம் நடத்த சுவனத்துப் பெண்களாளே தவிர வேறு யாரலும் முடியாது.?

பெண்னின் அழகு அவளின் முகத்தை வைத்தே தீர்மானிக்கப்படுகின்றது இதை யாரும் மறுக்க முடியாது அந்த முகம் என்ற அலங்காரப்படைப்பு தன் கற்புக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தன்னை மறைத்துக் கொள்ளும் பெண் திறைக்கு பின்னிருந்தே அன்னிய ஆண்களுக்கு பதில் கூறுங்கள் என்ற இறைவசனத்துக்கு கட்டுப்பட்ட நபிகளாரின் மனைவியரை முன்மாதிரியாக கொண்டவள்.

அழகான பெண்ணோ அழகற்ற பெண்ணோ ஓர் ஆண் அவளைக் கண்டால் காதலோ காமமோ ஆசையோ அவன் மனதில் உதித்து விடும் இதை இல்லையென்று எந்த ஆணாலும் மறுக்க முடியாது. இதை மறுப்பவர்கள் உளவியல் ரீதியாகப் பாதிக்கப் பட்டவர்களே. அப்படியிருக்க தன்மூலம் ஒர் ஆண் வழி தவறிவிடக்கூடாது என தன்னையும்’ பிறறையும் தவறு செய்யாமல் பாதுகாக்க அல்லாஹ்வின் அருள் பெற்றவர்களாளே தவிர வேறு யாராலும் சாத்தியமாகாத ஒன்றே.

பெண்ணானவள் உலகத்தில் ஒர் அழங்காரப் பொருளாகவே படைக்கப் பட்டிருக்கிறாள். அதனால் தானோ எல்லா இடங்களிலும் தன் அழகை வெளிக்காட்டுதை சில மானங்கெட்ட தந்தைமாறும் ரோஷம் இல்லாத சகோதரர்களும் வீரத்தை இழந்த கணவன்மாறும் மௌனிகளாக நின்று அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றியதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் ஒழுக்கமாக வாழ வேண்டும் என்று நினைத்து தன் அவ்ரத்துக்களை மட்டுமல்லாது தன் அங்க அடையாளங்களையும் மறைத்து கற்பைப்பேணும் பெண்களை அவமானப் படுத்தியும் அர்களின் பேணுதலை ஏளனப்படுத்தியும் பேசுகின்ற எழுத்துக்களால் வசைபாடுகின்ற ஒவ்வொருவரும் நாளை மறுமை நாளில் புறம் பேசி அவதூறு கூறியதற்கான தண்டனையை எதிர்பார்த்துக் கொள்ளட்டும்.

முகத்தை மூடும் பெண்கள் வெறும் துறவிகளாகப் படைக்கப்படவில்லை அவர்களும் காதல் காமம் ஆசை என்பவற்றுடனே படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஈமானோடும் இறையச்சத்தோடும் தன் கற்ப்பையும் பார்வையையும் அதிகமாகவே கட்டுப்படுத்திக் கொள்ள நினைக்கின்றனர். அதனால் தான் முன்சென்ற இமாம்கள் கூறினார்கள் வெட்கம் அதிகரிக்க அதிகரிக்க அவளின் ஆடை அதிகரிக்கும் என்று இன்று ஆடைக்குறைப்பு ஒழுக்கமாக பார்க்கப்படுகின்றது.

குறிப்பு: முகம் மூடும் பெண்கள் தான் சிறந்தவர்கள் ஸாலிஹானவர்கள் என்று பத்வா கூறவில்லை. அவர்களிலும் தவறு செய்பவர்கள் இருக்கின்றனர். முகத்தை மூடாமலே தன்னை அண்ணிய ஆண்களின் கண்ககளிலிருந்து மறைத்து ஒழுக்கமாக வாழக்கூடியவர்கள் அதிகமாகவே உள்ளனர். எனவே விமர்சிப்பவர்கள் அணிந்த ஆடைகளைக் களைய வைத்து பித்னாக்களை உருவாக்க முயற்சி செய்யாமல் ஆடையின்றி நிர்வாணிகளாக வளம் வருபவர்களுக்கு ஆடை அணிவிக்க முயற்சி செய்து உங்களதும் எனதும் எதிர்கால சந்ததிகளை பித்னாக்களில் இருந்து பாதுகாப்போம். இன்ஷாஅல்லாஹ்

ஷிபானா நவாஸ்தீன்
உஸைமீனிய்யா
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

சுவனத்துக் கண்ணழகிகளை எந்தக் கண்ணுமே கண்டிராத பெண்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். அது அவர்களுக்கு வழங்கப்பட்ட தனிச் சிறப்பு. இவ்வுலகத்துப் பெண்கள் அவர்களின் அழகையோ சிறப்பையோ குணத்தையோ எட்டிவிட முடியாது. ஆனாலும் சுவனத்துப் பெண்களைப்…

சுவனத்துக் கண்ணழகிகளை எந்தக் கண்ணுமே கண்டிராத பெண்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். அது அவர்களுக்கு வழங்கப்பட்ட தனிச் சிறப்பு. இவ்வுலகத்துப் பெண்கள் அவர்களின் அழகையோ சிறப்பையோ குணத்தையோ எட்டிவிட முடியாது. ஆனாலும் சுவனத்துப் பெண்களைப்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *