முகநூலை நோக்கி!
- by admin
- 6
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
மனக் கண்ணில் மாயாஜாலம் காட்டி
மற்றவர் மனதில் உறவை நிலை நாட்டி
மகத்தான உறவு என வித்தை காட்டி
மாயையான விடயங்கள் பல
அரங்கேறும் மனம் திறந்த மேடை!
தனிமையின் தூண்டுதலால்
தன்னிலை மறந்த இதயங்களால்
தான்தோன்றித் தனமாக
பொழுதை நகர்த்தும் விசை!
கண் கொண்ட மயக்கத்தால்
கானல் நீர் கூட
கடலாய்த் தோன்றும்!
காதல் என்ற பெயரில்
இருப்பதை இழந்து விட்டு
இல்லாத ஒன்றுக்காய்
ஏங்கச் செய்திடுமே!
வாழ்க்கை என்றால் என்ன
என்பதே தெரியாமல்
இதயத்தை இயந்திரமாக்கி
இரவு பகலாக விழித்திருந்து
வீணடித்த பொழுதுகளை எல்லாம்
நினைத்து நினைத்து
விம்மி அழச் செய்திடுமே!
அழகழகாய் அன்புப்பூக்கள்
அவரவர் காலடியில் பூத்துக் கிடக்க
காகிதப் பூக்களுக்காக
கதை கதையாக சொல்ல வைத்திடும்!
கனவுலகில் மிதந்து
கனவுலகில் வாழ்ந்து
கடைசியில் அவர் வாழ்வையும்
கனவாக ஆக்கிடுமே!
தூங்கும் போது
விழித்திருக்கச் செய்து
விழித்திருக்கும் போது
தூங்கச் செய்து
தாம் இழந்து போவது
எது என்பதே அறியாமல்
சோகத்தைக் கூட
சுகமான சுமை என
சுமக்கச் செய்திடுமே!
நாட்டு நடப்பையும்
அறியத் தந்திடும்!
வீட்டு நடப்பையும்
வீதிக்கு கொண்டு வரும்!
வீண்பழி சுமக்கச் செய்து
விடியாத இருளுக்குள்
விடியலை தேடி தேடி
அலைய வைத்து
விளக்கில் வீழ்ந்த
விட்டில் பூச்சிகளாய்
எம்மை விதியோடு
விளையாட வைத்திடுமே!
விற்பனையில் வினோதம் காட்டி
வேண்டிய பொருளை புறக்கணித்து
விற்பனை பொருளை விரும்பச் செய்து
பணமீட்டச் செய்யும்
சிறந்த வியாபாரி!
உறவின் அருமை புரியாது
உணர்வுகளுக்கு அடிமையாகி
எம்மை அரிதாரம் பூசிய
முகங்களோடு அலையவிடும்
சிறந்த ஒப்பனையாளன்!
நாம் நடந்து வந்த பாதையை
திரும்பிப் பார்க்க வைத்திடாது
போகும் பாதையும் புரிந்திடாது
துரத்தி வரும் துன்பம் அறிந்திடாது
தூக்கத்தில் வரும் பகல் கனவாய்
ஆக்கிடுமே நம் வாழ்வை!
நூலறுந்த பட்டமாய் அந்தரத்தில்
தொங்க வைத்து
தொடர்கதை ஒன்றை
சிறுகதையாக்கி
விடையில்லா விடுகதையாக
எம்மை திண்டாட வைத்திடுமே!
விழித்துக் கொண்டே
உறங்கியது போதும்!
விழித்திருப்பது உன்
விழிகள் மட்டும் தான்
என்பதை புரிந்து கொள்!
உன் பாதையை மாற்றிவிடு!
பயணத்தை தொடர்ந்திடு!
நல்ல உறவுக்கு கைகொடு!
நட்புக்கு வழிவிடு!
நன்மை தீமை புரிந்திடு!
நாட்டு நடப்புகளைத் தெரிந்திடு!
நல்லவனாக வாழ்ந்திடு!
நாளைய சந்ததிக்கு வழிகாட்டிடு!
Nifra Nijam
Daluwakotuwa,
Kochchikade,
Negombo.
மனக் கண்ணில் மாயாஜாலம் காட்டி மற்றவர் மனதில் உறவை நிலை நாட்டி மகத்தான உறவு என வித்தை காட்டி மாயையான விடயங்கள் பல அரங்கேறும் மனம் திறந்த மேடை! தனிமையின் தூண்டுதலால் தன்னிலை மறந்த…
மனக் கண்ணில் மாயாஜாலம் காட்டி மற்றவர் மனதில் உறவை நிலை நாட்டி மகத்தான உறவு என வித்தை காட்டி மாயையான விடயங்கள் பல அரங்கேறும் மனம் திறந்த மேடை! தனிமையின் தூண்டுதலால் தன்னிலை மறந்த…