பிரார்த்திப்போம்
- by admin
- 24
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
உயிர்கள் கருகும் தேசமிது
சாம்பல் காடாய் மாறிடுமோ
உணர்வுகள் என்று விழிப்படையும்
உடையும் இங்கே இதயங்களும்
அத்துமீறும் ஆணைகளால்
உரிமை பேச வந்தோரோ
கடமை செய்யத் தவறியோரே
எங்கே பாதை செல்கிறது
யாரும் அறியோம்
யாது செய்ய வேண்டுமென்ற
வரைமுறையும் நாமறியோம்
பதாகை தாங்கிய கால்நடை போல்
எங்கள் பயணம் இருக்கிறது
ஏன்?எதற்கு? வினாத்தொடுக்க
வாயின்றி வாடுகிறோம்.
காலச்சுவடுகள் பல சொல்லும்
காயங்கள் இதயத்தை கீறிச்செல்லும்
உடைமை இழந்தோம்
உயிர்களை இழந்தோம்
உரிமையும் இழந்தோம்
உண்மை இங்கே வாய்ப்பூட்டு
போலிக்கு இங்கே கை தட்டு
இனவாத மேகங்களின்
அமிலமழையில்
இத்துப் போனது
என் தாய் நாடு
சட்டங்கள் எல்லாம்
சட்டகங்களுக்குள்
சமாதியானது
ஆட்சி மோகத்தில்
சூழ்ச்சி நடைபெற
மீட்சி தேடி என் மனமோ
படைத்தவனிடமே
மீள்கின்றது….
மக்கொனையூராள்.
உயிர்கள் கருகும் தேசமிது சாம்பல் காடாய் மாறிடுமோ உணர்வுகள் என்று விழிப்படையும் உடையும் இங்கே இதயங்களும் அத்துமீறும் ஆணைகளால் உரிமை பேச வந்தோரோ கடமை செய்யத் தவறியோரே எங்கே பாதை செல்கிறது யாரும் அறியோம்…
உயிர்கள் கருகும் தேசமிது சாம்பல் காடாய் மாறிடுமோ உணர்வுகள் என்று விழிப்படையும் உடையும் இங்கே இதயங்களும் அத்துமீறும் ஆணைகளால் உரிமை பேச வந்தோரோ கடமை செய்யத் தவறியோரே எங்கே பாதை செல்கிறது யாரும் அறியோம்…