வாரிசுரிமை சட்டங்கள் பகுதி – 01
- by admin
- 23
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
வாரிசுரிமை என்றால் என்ன?
ஒருவர் (ஆண்/பெண்) இறக்கும் போது அவருடைய சந்திகளாக யாரெல்லாம் உயிரோடிருக்கின்றனரோ அவர்களுக்கு இறந்தவருடைய சொத்திலிருந்து வழங்கப்படும் சொத்தே வாரிசுரிமை என்று பொதுவாக சொல்லப்படும்.
ஒருவருடைய சொத்துக்களைப் பிரிப்பதற்கான பொது விதிகள்
- ஒருவர் இறந்த பிறகே அவரது சொத்துக்களைப் பிரிக்க வேண்டும்.
- ஒருவர் இறக்கும் போது அவரது வாரிசுகளாக உயிரோடு யாரெல்லாம் உள்ளார்களோ அவர்களுக்கே சொத்தைப் பிரித்துக் கொடுக்க வேண்டும்.
- மாறுபட்ட மதத்தவர்களுக்கிடையில் சொத்துரிமை கிடையாது. (உதாரணம்:- தகப்பன் முஸ்லிம், மனைவி மக்கள் காபிர்)
- இறந்தவருடைய சொத்துக்களை அவரது கடன்களை நிறைவேற்றிய பின்னரே பிரித்துக் கொடுக்க வேண்டும்.
- ஒருவர் உயிரோடிருக்கும் போது வஸிய்யத் செய்திருந்தது மரணித்தால், அவரது வஸிய்யத்தை நிறைவேற்றிய பின்னரே வாரிசுகளுக்கு சொத்தைப் பங்கீடு செய்ய வேண்டும்.
- ஒருவர் வஸிய்யத் செய்வதாக இருந்தால், அவரது மொத்த சொத்தில் மூன்றில் ஒரு பகுதியை மிகைக்காமலே வஸிய்யத் செய்ய முடியும்.
- மூன்றில் ஒரு பகுதிக்கு அதிகமாக வஸிய்யத் சொய்திருந்தால், அதனை நிறைவேற்றக் கூடாது.
- ஒருவர் தனது வாரிசுகளுக்கு சொத்தில் வஸிய்யத் செய்ய முடியாது.செய்தாலும் அந்த வஸிய்யத் செல்லாது. காரணம் அவர்கள் வாரிசுதாரர்களே.
- யாரெல்லாம் வாரிசாக வரமாட்டார்களோ அவர்களுக்கு மாத்திரமே வஸிய்யத் செய்ய முடியும்.
- வளர்ப்புப் பிள்ளைகளுக்கு வாரிசுரிமை கிடையாது.
- ஒருவர் உயிரோடிருக்கும் போது வளர்ப்புப் பிள்ளைக்கு தர்மமாக சொத்தில் ஒரு பங்கை வழங்கலாம்.
- ஒருவருடைய சொத்தில் ஒரு ஆணுக்கு இரண்டு பெண்களுக்குறிய பங்கு வழங்கப்பட வேண்டும்.
அஜ்மீர் பாரூக்
வாரிசுரிமை என்றால் என்ன? ஒருவர் (ஆண்/பெண்) இறக்கும் போது அவருடைய சந்திகளாக யாரெல்லாம் உயிரோடிருக்கின்றனரோ அவர்களுக்கு இறந்தவருடைய சொத்திலிருந்து வழங்கப்படும் சொத்தே வாரிசுரிமை என்று பொதுவாக சொல்லப்படும். ஒருவருடைய சொத்துக்களைப் பிரிப்பதற்கான பொது விதிகள்…
வாரிசுரிமை என்றால் என்ன? ஒருவர் (ஆண்/பெண்) இறக்கும் போது அவருடைய சந்திகளாக யாரெல்லாம் உயிரோடிருக்கின்றனரோ அவர்களுக்கு இறந்தவருடைய சொத்திலிருந்து வழங்கப்படும் சொத்தே வாரிசுரிமை என்று பொதுவாக சொல்லப்படும். ஒருவருடைய சொத்துக்களைப் பிரிப்பதற்கான பொது விதிகள்…