Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
வெறுமை 

வெறுமை

  • 14

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

நான்கறை சுவற்றினிலே
தனிமை எனும் வெறுமையிலே
தனியாக நான் இருக்கையில்
தலையணையும் கண்ணீரும்
துணையாக வந்ததே

சொல்லம்பில் ஓரம்பு
என் மனதை கிழித்து விட
அவ் அம்பால் உருவான
கருங்குருதி கண்களிலே
கண்ணீராய் கசிகிறதே

கண்களெல்லாம் வீங்கிவிட
தலையணையும் நனைந்து விட
மருந்துண்டோ மனதிற்கு

உடலதுவோ காயப்பட்டால்
சில மருந்தால் ஆற்றிடலாம்
உள்ளமது புண்ணாக
எம் மருந்தை நானிடவோ

சில சொற்கள் புண்ணாக்கும்
சில சொற்கள் மருந்தாகும்

நீ சொன்ன வார்த்தையினால்
பூ உள்ளம் புண்படவே
மருந்தின்றி கண்ணீரால்
தலையணையை வதைக்கிறதே

Shima harees
puttalam

நான்கறை சுவற்றினிலே தனிமை எனும் வெறுமையிலே தனியாக நான் இருக்கையில் தலையணையும் கண்ணீரும் துணையாக வந்ததே சொல்லம்பில் ஓரம்பு என் மனதை கிழித்து விட அவ் அம்பால் உருவான கருங்குருதி கண்களிலே கண்ணீராய் கசிகிறதே…

நான்கறை சுவற்றினிலே தனிமை எனும் வெறுமையிலே தனியாக நான் இருக்கையில் தலையணையும் கண்ணீரும் துணையாக வந்ததே சொல்லம்பில் ஓரம்பு என் மனதை கிழித்து விட அவ் அம்பால் உருவான கருங்குருதி கண்களிலே கண்ணீராய் கசிகிறதே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *