வேட்கை
- by admin
- 10
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
வசந்தத்தை தேடி
பறக்கின்றதோர் புறா.
வானவில்லாய் அது
செல்லும் பாதையெல்லாம்
பருந்து தன் பார்வையை
சுழல விட்டதனால்
பதறிப்போய் சிறகிழந்த
பறவையாய் பயணமானதோ புறா!
பஞ்சு போன்ற அதனுடம்பை
குதறி பார்ப்பதற்காய்
கண்ணிரண்டை
கூர்மையாக்குவதால்
செயழிலந்த பாவையாய்
பறிதவித்ததோ புறா.
சாந்தமான சதைகளை
சப்பித் துப்புவதற்காய்
கோர அலகினை
அழகுபடுத்துவதால்
ஊமையாகி ஊனமுற்று
போனதோ புறா
பூ போன்ற அதன்
சிறகினை பிடுங்கிச்
செல்வதற்காய்.
சீற்றம் கொண்ட
சிவந்த நகங்களை
சீவுவதால்.
பூவிழந்து புன்னகையை
உதிர்ததோ புறா.
வசந்தத்தை தேடி
உண்டான பயணம்.
பருந்தின் பார்வையில்
பழியாகிடுவேனோ?
எனும் பயத்திலே
பாழாய் போகிறது.
Shima Harees
Puttalam
வசந்தத்தை தேடி பறக்கின்றதோர் புறா. வானவில்லாய் அது செல்லும் பாதையெல்லாம் பருந்து தன் பார்வையை சுழல விட்டதனால் பதறிப்போய் சிறகிழந்த பறவையாய் பயணமானதோ புறா! பஞ்சு போன்ற அதனுடம்பை குதறி பார்ப்பதற்காய் கண்ணிரண்டை கூர்மையாக்குவதால்…
வசந்தத்தை தேடி பறக்கின்றதோர் புறா. வானவில்லாய் அது செல்லும் பாதையெல்லாம் பருந்து தன் பார்வையை சுழல விட்டதனால் பதறிப்போய் சிறகிழந்த பறவையாய் பயணமானதோ புறா! பஞ்சு போன்ற அதனுடம்பை குதறி பார்ப்பதற்காய் கண்ணிரண்டை கூர்மையாக்குவதால்…