எங்க ஊரு பஞ்சாயத்து
- by admin
- 10
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
பாவி மக வாக்கப்பட்டு
பத்து வருசம் ஆச்சுதையா
வம்சம் வாழ வேணுமுன்னு
வருசம் ஒண்ணா
ரெண்டு பையன்
நல்லா தான் வாழ்ந்திருந்தோம்
இந்த கதய கேளுங்கையா
சீவிமுடிச்சி சிங்காரிச்சி
வளச்சிப்போட்டா வள்ளியம்மா
நாதாரி புருசனால
நாதியற்று போயிறுவேன்
நல்ல வழி காட்டுங்கையா
பாத்து வளர்த்த நம் பசங்க
பள்ளி கூடம் அனுப்பிடவு
பசிச்ச வாய்க்கு ஊட்டிடவு
வக்கத்து நிக்கின்றேன்
வழி ஒன்னு சொல்லுங்கையா
நாலு பணம் பாத்துவர
நாட்டுக்கு போயுழைச்சான்
நாளெல்லாம் உழைச்சுபுட்டு
நாலு காச சீட்டு போட்டான்
சீட்டுக்கார வள்ளியம்மா
சின்னவீடா வந்து நிற்கா
நம்ம ஊரு பஞ்சாயத்து
நாயம் ஒன்னு சொல்லுமுன்னு
நம்பிக்கயோட வந்து நின்னு
ஏ கதி சொல்லிபுட்டேன்
நல்ல தீர்ப்பு சொல்லிடுங்க
கையெடுத்து கும்புடுறே
நஷீரா ஹஸன்
கேகாலை
பாவி மக வாக்கப்பட்டு பத்து வருசம் ஆச்சுதையா வம்சம் வாழ வேணுமுன்னு வருசம் ஒண்ணா ரெண்டு பையன் நல்லா தான் வாழ்ந்திருந்தோம் இந்த கதய கேளுங்கையா சீவிமுடிச்சி சிங்காரிச்சி வளச்சிப்போட்டா வள்ளியம்மா நாதாரி புருசனால…
பாவி மக வாக்கப்பட்டு பத்து வருசம் ஆச்சுதையா வம்சம் வாழ வேணுமுன்னு வருசம் ஒண்ணா ரெண்டு பையன் நல்லா தான் வாழ்ந்திருந்தோம் இந்த கதய கேளுங்கையா சீவிமுடிச்சி சிங்காரிச்சி வளச்சிப்போட்டா வள்ளியம்மா நாதாரி புருசனால…