Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
கண்ணியமானவன் 

கண்ணியமானவன்

  • 17

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

இருட்டு அறையில் குருட்டு
துலாவும் நேரம் இது.
இங்கே நீயும், நானும்
இரவும், நிலவும்
வேறு யாரும் இல்லை.

கூச்சங்கள் எல்லை மீறிவிட்டன.
ஏக்கங்கள் என் மனதை
சிதைக்கச் செய்து விட்டன.
என் வெட்கங்கள் எல்லாம்
இந் நொடியுடன்
கண்ணாடி துகள்களாக சிதறி விட்டன.

நான் உன் மடி சாய்ந்து விட்டேன்.
என்னை மார்போடு அனைத்துக் கொள்.
உன் வெப்பமும் மூச்சும் தான்
என் உயிராகி கலந்திட வேண்டும்.
என்னை இறுக்கி அனைத்துக் கொள்!

உன்னைப் போல்
ஆயிரம் ஆடவனை
என் முன் நிறுத்திவைத்தாலும்.
உன்னையே நான் ஆண் என்பேன்.
ஆண்மையிலும் மென்மையை
கொண்டவன் நாயகன் நீயடா.

தனிமை உனக்கு வாய்ப்பாக
அமைந்த பின்னும்.
என் தன்னடக்கத்திற்கு
தலை சாய்த்தவன் நீ!!
உன் மீது நான் கொண்ட
நம்பிக்கையினில் மொழிகிறேன்.
உனக்கான காத்திருப்புக்கள்
என் வாழ்வில் என்றும் தொடரும்.

கன்னி மயிலை
கண்ணியப்படுத்திய
கருணை மிகு ஆடவன் நீ!

Fathima Badhusha Hussain Deen
Faculty of Islamic Studies
South Eastern University of Sri Lanka

இருட்டு அறையில் குருட்டு துலாவும் நேரம் இது. இங்கே நீயும், நானும் இரவும், நிலவும் வேறு யாரும் இல்லை. கூச்சங்கள் எல்லை மீறிவிட்டன. ஏக்கங்கள் என் மனதை சிதைக்கச் செய்து விட்டன. என் வெட்கங்கள்…

இருட்டு அறையில் குருட்டு துலாவும் நேரம் இது. இங்கே நீயும், நானும் இரவும், நிலவும் வேறு யாரும் இல்லை. கூச்சங்கள் எல்லை மீறிவிட்டன. ஏக்கங்கள் என் மனதை சிதைக்கச் செய்து விட்டன. என் வெட்கங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *